Wednesday, August 29, 2012

Reema Sen speaks about her acting in Sattam Oru Iruttarai

Reema Sen speaks about her acting in Sattam Oru Iruttarai

TamilReema Sen while speaking about acting in the remake of the film Sattam Oru Iruttarai said, Some are making fun of me because I am donning the roles of sister and sister-in- law because I got married.

Cinema News From Tamilomovie.com

Click Here To See Tamil Movie Gallery

If I get married will my age increase or will my beauty go. I am still looking beautiful and glamorous. As far as this film is concerned I am donning the powerful role which Hemamalini donned in the Hindi version.

In the remake version my role has been enlarged and my scenes have been increased. 18 years old girl is directing this film. It is my duty as a senior to motivate this youngster. I am very happy that I am being called as a glamorous actress. As far as this film is concerned I am not exposing my physique. Though I am wearing sari throughout the film I will look very glamorous. This is God's gift to me.

Monday, August 27, 2012

What happened when Thala (Ajith) met Vaalu (Simbhu?)

What happened when Thala (Ajith) met Vaalu (Simbhu?)

/images/DailyNewsPhotos/1012/AjithSimbhu is an ardent fan of Ajith. This he will depict in all his films.

Cinema News From Tamilomovie.com

Click Here To Watch Tamil TV Serials

Simbhu happened to meet Ajith in Mumbai who is currently acting in a film directed by Vishnuvardhan.

Ajith had been in Mumbai recently to participate in the shooting of the film English Vinglish.

Simbhu had also gone to Mumbai to participate in the shooting of Poda Podi. Both of them met there and spoke. It is understood that both of them spoke about t he gym exercises and health.

Simbhu has completed Poda Podi and is now concentrating in the film Vaalu. Simbhu while speaking said, I had seen the edited portions of Vaalu.

It has come out well. Director Vijay Chandar and editor Suresh has done a good job. We have decided to release a single track of Vaalu very soon.

This song begins with the lines Lovenraven Nee Yaru Da? Yen Munnadi Vandhu Ninu Paaru Da...

Thursday, August 9, 2012

பிறந்த நாளன்று இரு குழந்தைகளைத் தத்தெடுத்த ஹன்ஸிகா!





தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடும் வகையில் குடிசைப் பகுதியிலிருந்து இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார் முன்னணி நடிகை ஹன்ஸிகா.

நடிகை ஹன்ஸிகாவுக்கு இன்று பிறந்த நாள். பொதுவாக பிறந்த நாளன்று பார்ட� �டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள் நடிகர் நடிகைகள்.

ஆனால் ஹன்ஸிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.

இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்ஸி� ��ாதான் செய்யப் போகிறாராம்.

மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப் போகிறாராம்.

அழகு என்பது வெறும் புறத் தோற்றத்தில் மட்டும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஹன்ஸி.

பிறந்தநாள் வாழ்த்துகள்!
.






Sunday, August 5, 2012

சர்வதேச உளவாளி விஜய்! .







"துப்பாக்கி' படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ள விஜய்,

கவுதம் மேனன் இயக்கும், "யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார்.


இப்படம் முழுக்க, முழுக்க வெளி நாடுகளின் பின்னணியில் உள்ளதால், ம� ��த்த படப்பிடிப்பையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடத்துகிறார் கவுதம் மேனன்.
.





Saturday, August 4, 2012

கமலின் ஹாலிவுட் படத்தில் சூர்யா! .







மாற்றான் படத்தில் இரு வேடங்களில் கன்ஜாய்ண்ட் ட்வின்ஸாக நடித்திருக்கும் சூர்யா மொத்தம் 2500 காட்சிகள் நடித்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் இரு கதாபாத்திரங்களுக்காக இரண்டு முறை நடிக்க வேண்டும்.
அதிலும் சரியாக வராத காட ்சிக்காக ரீடேக் எடுக்கவேண்டும் என படத்தில் மொத்தம் 2500 காட்சிகள் சூர்யாவின் பங்கு.

சூர்யாவின் கடின உழைப்பை வீணாக்கக் கூடாது என்ற முடிவில் படத்தின் எடிட்டிங்கில் கவனத்துடன் இருக்கிறது மாற்றான் டெக்னீஷியன் யூனிட். மாற்றானுக்குப் பிறகு சிங்கம் -2 படத்தில் சூர்யா நடிக்கிறார் என்றிருந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படம் ஹாலிவுட் படமாக இருக்கலாம் என பரபரக்கிறது க� ��டம்பாக்கம்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பார்ன் தயாரிப்பில் நடிகர் கமலஹாஸன் இயக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் சூர்யாவை நடிக்கவைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் கமலஹாஸன். திரைத்துறையில் கமலஹாஸனுக்கும் சூர்யாவிற்கும் இடையே நல்ல புரிதல் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

சூர்யாவின் கடின உழைப்பை வாழ்த்தி சூர்யாவிற்கு உடற்பயிற்சி கருவிகளை கமல் பரிசளித� �தது, சூர்யாவின் நடிப்பை பாராட்டும் முதல் ஆளாக கமல் இருப்பதுமே அதற்கு சான்று. மாற்றான் படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்டு 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது.





லிங்குசாமியுடன் மீண்டும் இணைகிறார் அஜீத்?







இயக்குநர் லிங்குசாமி தன் படங்கள் குறித்து எப்போது பத்திரிகையாளர்களிடம் பேசினாலும், ஒரு படத்தைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார். அந்தப் படம் அஜீத் நடித்த ஜீ!
2005-ல் அஜீத் - த்ரிஷா நடிப்பில் உருவான இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் நல்� �� பாடல் கூட உண்டு.
ஆனால் படம் படு சுமாராகப் போனதால், ஹீரோ அஜீத்தும் சரி, இயக்குநர் லிங்குசாமியும் சரி.. இந்தப் படத்தை மறக்க விரும்புவது இயல்புதான்.
ஆனால் இப்போது இந்த இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அஜீத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இயக்குநர� � லிங்குசாமி இதுபற்றிக் கூறுகையில், "அஜீத்துடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆசைதான். ஆனால் அதற்கு நல்ல ஸ்க்ரிப்ட் வேண்டும். அஜீத்துக்கு ஏற்றமாதிரி அமைய வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இப்போது சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கும் வேலையில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி.





தென்னிந்திய நாயகிகளை பாடாய்ப்படுத்தும் பாலிவுட் மோகம் .






வட இந்திய நடிகைகளின் ஆட்சி தென்னிந்திய திரையுலகில் நடக்கையில் இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்றவர்களின் நிலையை சற்று அலசிப் பார்ப்போம்.

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த அசின் சூர்யாவுடன் இணைந்து நடித்த க ஜினி இந்திக்கு போனது.
இந்தியில் சூர்யாவுக்கு பதில் ஆமீர் கானை நடிக்க வைத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நாயகியாக அசினையே மீண்டும் தேர்வு செய்தார். அந்த படம் சூப்பர்டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசினுக்கு கோலிவுட் கசந்து பாலிவுட் இனித்தது.

இதையடுத்து சல்மான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் ஓரளவுக்கு ஓடியது. மீண்டும் அவருடன் சேர்ந்து நடித� ��த ரெடி சூப்பர் ஹிட்டானது. அண்மையில் வெளிவந்த ஹவுஸ்புல் 2வும் ஹிட்டானது.

இத்தனை ஹிட் கொடுத்தாலும் அசினைக் கொண்டாட அங்கே ஆளில்லை. நான் ஹிட் நடிகை என்று பாவம் அவரே சொல்லிக் கொண்டு திரிகிறார். அவரைக் கண்டால் பாலிவுட் நடிகைகளுக்கு ஏதோ காமெடி பீஸைப் பார்ப்பது போன்று உள்ளது என்று முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இந்த விஷயம் அவருக்கு தெரியுமோ என்னமோ?

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் அவர் நடிகையாக ஆனார். ஆனால் லக் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து பொட்டியைக் கட்டிக் கொண்டு தமிழுக்கு வந்த அவர் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு ஹிட்டானது. இதற்கிடையே தெலுங்குப் பக்கம் போன அவரின் படங்கள் ஓடாமல் இருந்தன. அப்போது தான் கப்பார் சிங் வெளியாகி கண்டமேனிக்கு ஓடியுது. இதையடுத்து ஸ்ருதிக்கு தெலுங்கிலும் கிராக்கி அதிகரித்தது.

தனுஷுடன் 3 படத்தில் நடித்து முடித்ததோடு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு போய்விட்டார். அவரையும் பாலிவுட் மோகம் விடவில்லை. இந்தி படங்களில் வாய்ப்பு தேடுகிறார்.

காஜல் அகர்வால்

ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு நடிகர்களிடம் காஜல் பெயரைச் சொன்னால் சமத்துப் பொண ்ணு என்பார்கள். ஹீரோ லேட்டா வந்தாலும் கூட எத்தனை மணிநேரமானாலும் காத்திருந்து நடித்துக் கொடுப்பவர்.

தெலுங்கில் பெரிய நடிகையான காஜல் தற்போது தமிழில் விஜய், சூர்யா, கார்த்தியுடன் நடிக்கிறார். இதற்கிடையே சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் நடித்தார். படம் என்னமோ ஹிட் தான். ஆனால் காஜலைத் தான் திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை.

வாய்ப் பு கொடுக்கவும் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார். அப்படியாவது யாராவது பாலிவுட் இயக்குனர் வாய்ப்பு தர மாட்டாரா என்ற நப்பாசை தான்.

இலியானா

இவர் கதை பெரும் கதை. ஆனால் அதை சுருக்கமாக சொல்கிறோம். தெலுங்கில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி கொடி கட்டிப் பறக்கும் இலியானாவையும் பாலிவுட் மோகம் வி்ட்டு வை க்கவில்லை.

அவரும் நல்ல நாள் நேரம் பார்த்து மும்பைக்கு போனார். பர்பி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் நாயகன் ரன்பிர் கபூர். ஆனால் படத்தில் பாலிவுட் ராணி பிரியங்கா சோப்ராவும் உள்ளார். அப்பொழுது யாருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். இநத படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. ஆனால் இந்த படம் இ ந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போனது. இலியானாவின் முதல் இந்தி படத்தை சீக்கிரம் வெளிவர விடாமல் பிரியங்கா தான் இழுத்தடிக்கிறார் என்று பேச்சு அடிபட்டது.

இதற்கிடையே பிரியங்காவுக்கும், இலிக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. ஆனால் நாங்கள் எல்லாம் தோழிகளாக்கும் என்று ஒரு போட்டோவை எடுத்து வெளியிட்டார்கள். போட்டோவைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிடுவார்களா என்ன. இத்த� ��ையும் தாண்டி ஒரு வகையாக பர்பி வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு தான் இலியானாவின் பாலிவுட் பயணம் தொடருமா, புஸ்ஸாகுமா என்று தெரியும்.

த்ரிஷா

பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் த்ரிஷாவுக்கும் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து பிரியதர்ஷனின் கட்டா மீட்டா என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்தார். அந்� � படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.

அந்த படத்தைப் பார்த்த இந்தி ரசிகர்கள் த்ரிஷாவைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் தமிழ் ரசிகர்களோ இந்த உப்பு சப்பில்லாத கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் பாலிவுட் போனாருக்கம் என்றார்கள். அந்த படத்திற்குப் பிறகு வேறு ஏதாவது இந்திப் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. � ��ண்மையில் மூத்த நடிகரான சஞ்சய் தத்துடன் நடிக்க அழைத்தார்கள்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி அந்த வாய்ப்பை தட்டிக்கழித்தார். உண்மையிலேயே கால்ஷீட் பிரச்சனை தான் காரணமா?





Friday, August 3, 2012

மந்தவெளியில் புதுமுகம் அவர் தான் அஜீத் "






திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.

பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.
தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத், தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று அறிவித்த பின்னர் தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்� �ை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது " அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். "இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்றேன்.

உடனே எஸ்.பி.பி " தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில� �� நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்" என்றார்.

உடனே நான் 'பிரேம புஸ்தகம்' படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

நான் உடனே சென� �று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் " என்று கூறினார்.

20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!
.





பசுபதிக்கு ஜோடியா...? பதறினாராம் நயன்தாரா! .







உள்ளூர்ல வேணும்னா ஏகாம்பரமா இருக்கலாம். ஆனால் அசலூரை பொறுத்தவரைபல ஹீரோக்கள் உளுத்துப் போன பம்பரம்தான்! இது புரியாத கன்னட மலையாள ஹீரோக்கள் தாறுமாறாக சம்பளம் கேட்பதாக மூக்கு சிந்திக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். 

சமீபத ்தில் மோகன் என்ற புதுமுக இயக்குனர் மம்முட்டியிடம் கதை சொல்லி தமிழில் நடிக்க கால்ஷீட் கேட்டார். ஒரு கோடி சம்பளம். கேரள வெளியீட்டு உரிமையை அடிஷனலாக தர வேண்டும் என்று சுத்தியலை தலையில் போடாத குறையாக விரட்டிவிட்டாராம் அவர்.

இவரை நம்பி நயன்தாராவிடம் கதை சொல்லி வைத்திருந்தாராம் மோகன். மம்முட்டி என்றால் யோசிக்கலாம் என்று நயன்தாராவும் நம்பிக்கை கொடுத்திருந்தார். � ��ம்முட்டியின் சம்பள மிரட்டலில் எல்லாம் கொலாப்ஸ் ஆகிவிட்டது.

மம்முட்டி இல்லாட்டா என்ன? பசுபதி இருக்காரே என்று அவரிடம் கதை சொல்லி கால்ஷீட்டும் வாங்கிவிட்டார் மோகன். மறுபடியும் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு போனவருக்கு முன் வழுக்கையில் ரெண்டு பல் பதியாத குறை. அலறி தீர்த்துவிட்டாராம் நயன்.

கதர் சட்டை மேல, கரிச்சட்டியை கவுக்கணும்னு நினைச்சா யாருக்குதான் அத� �ர்ச்சி வராது?
.





விருந்தில் நடந்த விஷயங்களை வெளியில் சொல்ல முடியுமா? - தமன்னா







சென்னை: சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா.
தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரு ம் தங்கள் நட்பை 'மெட்ராஸ் சிமெண்ட்' போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம்.

அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி.
இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம்.
அப்படி என்னதான் பேசினீர்கள்... தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற் கு தமன்னா கூறிய பதில் இது:
தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது.
'வேங்கை' படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!)
தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்க� ��் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?," என்றார்.
பார்றா... உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!





Thursday, August 2, 2012

அடடா... வட போச்சே!







ரொம்ப கடுப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறாராம் நடிகை த்ரிஷா.
பின்னே.. இந்தியில் எப்படியும் தன்னை மீண்டும் நிலைநிறுத்தும் என்று எதிர்ப்பார்த்த படத்திலிருந்து திடீரெனத் தூக்கியடித்தால்... என்னதான் செய்வார்?
தெலுங்கில் பிரபு தேவ ா இயக்கிய முதல் படம் 'நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா' . த்ரிஷாதான் நாயகி.

இதே படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரில் வெளியாகி வெற்றி கண்டது. இதிலும் த்ரிஷாதான் நாயகி.
இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. அதிலும் திரிஷா நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. திரிஷா பொருத்தமாக இருந்ததால் அவரையே தேர்வு செய்ய பிரபுதே� �ா திட்டமிட்டு இருந்தாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார் த்ரிஷா.
காட்டா மீட்டாவில் கோட்டை விட்டதை பிரபு தேவா படத்தில் பிடித்துவிடலாம் என்பது அவர் கணக்கு.
ஆனால் திடீரென பிரபு தேவாவின் பார்வை கமல் மகள் ஸ்ருதி பக்கம் திரும்பிவிட்டதாம். இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இரவு விருந்து ஒன்றில் நயன்தாராவ� �ம், திரிஷாவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினர். அதன்பிறகு தொடர்ந்து இருவரும் நெருக்கமான தோழிகளாக மீடியாவுக்கு பேட்டிகளும் அளித்து வருகின்றனர்.
இதனால் கோபமடைந்துதான் த்ரிஷாவைக் கழட்டிவிட்டார் பிரபு தேவா என ஒரு பக்கம் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
இதுக்காகவெல்லாமா வாய்ப்பு தர மறுப்பாங்க?!




ஒரு கோடியைக் கூட வசூலிக்காத பில்லா 2- கடுப்பில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்







லண்டன்: அஜீத்தை கிங் ஆப் ஓபனிங் என்று வர்ணிப்பது அவரது ரசிகர்களின் விருப்பமான விஷயம்.
உண்மையில் ரஜினிக்குப் பிறகு, அவர் படத்துக்குதான் தமிழகத்தில் அதிக நாள் ஓபனிங் என்பதும் உண்மைதான்.

ஆனால் பில்லா 2 எல்லாவற்றையும் சொதப்� �ிவிட்டது. தமிழகத்தில் இரண்டாவது வாரமே டல்லடித்துப் போயின திரையரங்குகள். வேறு படங்களை மாற்று ஒப்பந்த முறையில் திரையிட்டு வந்தனர்.
இப்போது வெளிநாட்டில் இந்தப் படம் என்ன வசூலித்தது என்ற விபரம், அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாயைக் கூட வசூலிக்க முடியாமல் படுதோல்வியைத் தழுவியுள்ளது பில்லா 2.
தமிழ்ப் படங்க ளைப் பொறுத்தவரை, அமெரிக்காவும், பிரிட்டனும் முக்கியமான சென்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் படங்களிலேயே இந்த இரு நாடுகளிலும் அதிக தியேட்டர்களில் வெளியானது பில்லா 2தான்!
பிரிட்டனில்..
பில்லா 2 முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 20 அரங்குகலில் படம் வெளியானது.
அமெரிக்காவில்...
அமெரிக்காவில் 31 அரங்குகளில் இந்தப் படத்தை வெளி� ��ி்ட்டனர். அங்கு மொத்தம் ரூ 64 லட்சத்தை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளது. இது மங்காத்தாவின் வசூலைவிட மிகக் குறைவு.
மொத்தம் மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்த நிலையில், தூக்கப்பட்டுள்ளது பில்லா 2. பிரிட்டனில் இன்னும் குறைவாக, ரூ 79 லட்சத்துடன் தூக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.
இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.< br />இந்தப் படம் மூலம் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்களுக்கு நஷ்டமே கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.





பிரபுதேவாவை சந்தித்த விஜய்..!மீண்டும் போக்கி‌ரி கூட்டணி..!







ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு படங்கள் தந்திருக்கிறார் பிரபுதேவா. போக்கி‌ரி, வில்லு. மூன்றாவதாக இந்தக் கூட்டணி அமையுமா?

வான்டட், ரவுடி ரத்தோர் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனராகிவிட்டார் பிரபுதேவா.


நேற்று தனது புதிய இந்திப் படத்தை தொடங்கியுள்ளார். அவரது ஷெட்யூலைப் பார்த்தால் இன்னும் இரண்டு விருஷத்துக்கு அவர் தென்னகம் திரும்புவாரா என்று சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் பிரபுதேவாவை அவரது மும்பை வீட்டில் விஜய் சந்தித்ததாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. பிரபுதேவாவுக்காக ரவுடி ரத்தோ‌ரில் ஒரு பாடலுக்கு ஆடினார் விஜய். பதிலுக்கு பிரபுதேவா விஜய்யை இயக்குவ� �ர் என்கிறார்கள் கோடம்பாக்கத்து யூகக்காரர்கள்.

போக்கி‌ரி கூட்டணி மீண்டும் இணைந்தால் ஒரு ஹிட் நிச்சயம்.





Wednesday, August 1, 2012

நம்பரை கொடுத்துராதீங்க... -ஸ்ரேயா கெஞ்சல்!







சமீபத்தில் சென்னைக்கு வந்த ஸ்ரேயா 'சந்திரா' படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில் ஒன்றுதான் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அவரை.

ரஜினி சார் கூடவே நடிச்சுட்டேன். அப்புறம் யார் கூட நடிச்சா என்ன, நடிக்கலைன்னா என்ன? கதை நல்லாயிருந்தா போதும். யார் கூட வேணும்னாலும் நடிக்கலாம்.
அது புதுமுகமா இருந்தாலும் எனக்கு ஓகேதான் என்றார் கேஷுவலாக. அது போதாதா?

எருமைப் பாளயத்திலிருந்து ஏகாம்பரம் பேசுறேங்க... நம்ம கூட ஒரு படத்துல நடிக்கலாமே என்கிற ரீதியில் ஏகப்பட்ட 'அன் நோன்' கால்கள் வருகிறதாம் அவருக்கு. அடிக்கடி சென்போன் நம்பர்களை மாற்றிக் கொண்டிர ுந்தாலும், எப்படியோ மோப்பம் பிடித்து போன் அடித்துவிடுகிறார்களாம் சில புது இயக்குனர்கள்.

சமீபத்தில் தனக்கு நெருக்கமான சில புரடக்ஷன் மேனேஜர்களை தொடர்பு கொண்ட ஸ்ரேயா, 'அண்ணேய் புண்ணியமா போவும். என் நம்பரை தயவு செய்து எங்கேயும் கசிய விட்றாதீங்க' என்கிறாராம்.

கேட்கும்போதே கிறுகிறுன்னுதான் வருது...





கார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி தடியடி... தள்ளுமுள்ளு...






கிரிக்கெட் என்றால் ஆர்வத்தோடு அது பற்றி சிலாகிக்கும் நம்ம ஊர் ஹீரோக்களில் கார்த்தி ரொம்பவே வித்தியாசமானவர். நமது பாரம்பரிய விளையாட்டான கபடிக்கும் மரியாதை கொடுப்பவர். சில தினங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மிகப்பெரிய கபட ிப் போட்டி நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வீரர்களுக்கும் வீராங்கனைக்கும் பரிசளித்தார்.


கார்த்தி வருகிறார் என்றதும் அப்பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். அவரை பார்க்கும் ஆசையில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிலரால் கேலரி சரிந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் வேறு! இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன கார்த்தி, 'எல்லாரும் அம� ��தியா இருங்க. நானே உங்க இடத்துக்கு வர்றேன்' என்று கூறிவிட்டு அந்த கேலரியை சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தார்.

இவ்வளவு ஸ்போர்ட்டிவாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி. கார்த்திக்காக போடப்பட்டிருந்த இருக்கையின் இருபுறத்திலும் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் அமர்ந்திருக்க, அவர்களிடம் பேசினாலும் சிக்கல். பேசாவிட்டாலும் சி� �்கல். தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசப்படுமே என்று அஞ்ச ஆரம்பித்துவிட்டார் அவர்.

இவர்கள் இல்லையென்றால் அதிக நேரம் இருந்திருப்பாரோ என்னவோ? சட்டென்று கிளம்பி, விர்றென பறந்தேவிட்டார்.