Saturday, July 7, 2012

தாவணி போட்ட தேவயானி உற்சாகத்துக்கு ரெடி...


எப்படியோ போராடி தனது கணவரை ஹீரோவாக்கிவிட்டார் தேவயானி. 'திருமதிதமிழ்' படத்தின் மூலம் ராஜகுமாரன் ஹீரோவாகிறார்.

நான் கதாநாயகன் இல்லைங்க, கதையின் நாயகன் என்கிற வழக்கமான ஃபார்முலாவை இவர் அவிழ்த்துவிட்டாலும் ஃபைட், டூயட் என்� ��ு ராஜகுமாரனின் சகலவிதமான 'அச்சுறுத்தல்களும்' இருக்கிறதாம் படத்தில். ஆச்சர்யம் என்னவென்றால் தாவணி அணிந்து கொண்டு சில காட்சிகளில் ஆடவும் செய்திருக்கிறாராம் தேவயானி.
எத்தனை முறை சறுக்கினாலும் உற்சாகத்தோடு நிமிர்ந்து நிற்கும் தேவயானியின் உழைப்புக்காகவும் தன்னம்பிக்கைக்காகவும் இந்த படத்திற்கு கைகொடுக்க முன் வந்திருக்கிறார்கள் விநியோக� �்தர்கள். திருமதி ராஜகுமாரனுக்கு தமிழ்நாடு கைகொடுத்ததை போல தமிழும் கைகொடுக்கட்டும்...
.

கிராமத்துப்பையனாக நடிக்க ஆசை - அஜித்




கிராமியக் கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறுகிறார் அஜித்குமார்.

நடிகர் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் நகரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையாகத் தான் இருக்கும். மேலும் அவரது படம் முழுக்க சண்டைக்காட்சிகள், நகர நெரிசல் என்று காட்ச� �ப்படுத்தியிருப்பார்கள்.


இப்படி நடிப்பதற்கு அலுத்து விட்டதோ என்னவோ, கிராமியக்கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார் அஜித். அதாவது குத்துப்பாட்டு, திருவிழா என்று கிராமங்களுக்கு உரித்தான ஒரு கதையில் நடிக்க தயாராக இருக்கிறார் அஜித்.

என்ன தான் பெரிய புட்கேட் படங்களாக இருந்தாலும், ரசிகர்கள் அதைப்பார்த்த உடன் மறந்து விடுவ ார்கள். ஆனால் கிராமியக் கதைகள் தான் காலம் கடந்தும் நினைவில் இருக்கும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் அஜித்.

அஜித்தை விரைவில் இந்த மாதிரியான ஒரு கதையில் எதிர்பார்க்கலாம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.


ஏக குளறுபடி... 'கரிகாலன்' வர மாட்டான்? .




விக்ரம் நடிக்கும் முதல் சரித்திரப் படம் என்ற விளம்பரங்களுடன் வந்த கரிகாலன் படத்தில் ஏகப்பட்ட குளறுபடி. இனி அந்தப் படம் வருமா என்ற கேள்விக்குறியுடன் நிற்கிறது.

விக்ரம், ஷரின் கான், அஞ்சலி நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் தயாராக இருந்த 'கர� ��காலன்' படத்தினை 'சில்வர் லைன் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் டிரெய்லர் மற்றும் போட்டோ ஷுட் மட்டுமே எடுத்தார்களாம். படத்திற்காக என்று இதுவரை ஒரு காட்சி கூட எடுக்கவில்லையாம்.

இதனால் இயக்குனர் கண்ணன் நீக்கப்பட்டு, காந்தி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்த� �ானார். ஆனால், இப்போது படமே இல்லை என்றாகிவிட்டது.

விக்ரம் தனது அடுத்தடுத்த படப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 'தாண்டவம்' படத்தினை முடித்து இருக்கும் விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்திற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.

விக்ரம் கால்ஷீட் தேதிகள் ஒதுக்கினால் மட்டுமே 'கரிகாலன்' படத்தை துவக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிற� �ு.

இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டுள்ளாராம் விக்ரம். நயனோ கால்ஷீட் இல்லை என கைவிரிக்க, கரிகாலன் நிலைமை வடிவேலு போட்ட கிரிகாலன் வேடம் மாதிரி ஆகிவிட்டது.
.
.

நடிகை அனன்யா திருப்பதியில் ரகசிய திருமணம் கேரளாவில் திடீர் பரபரப்பு.!!




நடிகை அனன்யா திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, கேரளாவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அனன்யாவுக்கும் திருச்சூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயனுக்கும் பிப்� �வரி 2ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமான தகவல் வெளியானதால் அனன்யா திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் அனன்யா, ஆஞ்சநேயனைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் அவருக்கும் அவர் பெற்றோருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து ஆஞ்சநேயன் வீட்டுக்குச் சென்ற அனன்யா, அங ்கிருந்தபடி மலையாள ஷூட்டிங்கிற்கு சென்று வந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் அனன்யா அளித்த பேட்டியில், 'எனக்கு திருமணம் நடந்தால், வெளிப்படையாக அறிவிப்பேன்' என்றார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் திருப்பதி கோயிலில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கேரளாவில் தகவல் வெளியானது. இதுபற்றி அனன்யாவிடம் கேட்டபோது, 'நான் முன்பே சொன்ன மாதிரி, என் திருமணம் நடக� �கும்போது, முறைப்படி அறிவிப்பேன்' என்றார். திருப்பதியில் திருமணம் நடந்ததா என்பது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டார்.

தெறித்து ஓடிய த்ரிஷா செல்போனில் வந்த அழைப்பு




'கோப்பெருந்தேவி' என்றொரு படம். தமிழ்சினிமாவின் டாப் பெரும் தேவிகளில்பலரையும் இப்படத்தில் நடிப்பதற்காக தொடர்பு கொண்டாராம் டைரக்டர் அச்சுதன் சங்கர். அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல தெறித்து ஓட, சம்பளத்துல குறை வச்சுட்டோமோ என்று தனது பே� �்சை தானே ஒருமுறை ரீவைண்ட் பண்ணி பார்த்தாராம் அச்சுதன்.

ஆனால் சரியாதானே பேசியிருக்கோம். அப்புறம் ஏன் ஓட்டமெடுக்கிறாங்க என்ற அவரது குழப்பத்திற்கு அவரே விடையானார் சில மணித்துளிகளில். அதை சொல்வதற்கு முன்பு இவர் அழைத்த அந்த டாப் பெரும் தேவிகள் யார் யார் என்பதை சொன்னால்தானே ஒரு சுவாரஸ்யம் இருக்கும்? த்ரிஷாவும் ஸ்ரேயாவும்தான் அவர்கள்!

எடுத்த எடுப்பில� �யே 'ஒரு கோடி சம்பளம். கதை கேட்கிறீங்களா?' என்றாராம் அச்சுதன் சங்கர். இந்த படா படா சம்பளத்தில் படகென்று நிலைகுலைந்த த்ரிஷா, 'ஹீரோ யார், டைரக்டர் யார்?' என்று கேட்க, அங்குதான் பதுங்கு குழியை ரெடி பண்ணினார் இந்த பொல்லாத டைரக்டர். 'ரெண்டுமே நான்தாங்க' என்றாராம் நாணிக்கோணியபடி.

மயிலோட அழகை ரசிக்கிறேன்னு போக்கு காட்டிக்கிட்டே இப்படி பிரியாணி சட்டியையும் கழுவுறாங்களே எ� ��்று உஷாரான த்ரிஷா, செல்போன் இணைப்பை சட்டென்று துண்டிக்க, தன் நிலையிலிருந்து சற்றும் மனம் தளராத அச்சுதன் சங்கர் அடுத்ததாக ஸ்ரேயாவுக்கு போனை போட்டாராம்.

அங்க என்ன நடந்துருக்கும்னு தனியா வேற சொல்லணுமாக்கும்?

ஆமா... யாருய்யா அந்த அச்சுதன் சங்கர்? ஆர்வத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டே திரியும் புதுமுக இயக்குனர்.

எஸ்கேப் ஸ்ருதி..!விஜய் ,சூர்யா கலர்ஃபுல்லான போட்டி. !




துப்பாக்கி படத்திற்கு டைட்டில் பிரச்சினையால் கோர்ட் தடை விதித்திருப்பதால் நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் அடுத்ததாக விஜய் நடிக்க� �ிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் படமான யோஹான் பற்றி சில தகவல்கள் வெளிவந்துள்ளன. 

தமிழ் சினிமாவில் விஜய்க்கும், சூர்யாவிற்கும் இடையே நிலவும் ஹீரோயின் போட்டி பற்றி அனைவருக்கும் தெரியும்.
இவர் படத்தில் நடித்த ஹீரோயினை அவர் படத்தில் நடிக்க வைப்பது.

அவர் படத்தில் நடித்த ஹீரோயினை இவர் படத்தில் நடிக்க வைப்பது என அது இருவருக்கும் ஒரு கலர்ஃபுல்லான போட்டி.

ஹன்ஸிகா, அனுஷ்கா, நயன்தாரா, காஜல் அகர்வால் என தொடர்ந்து வந்த சங்கிலியில் மாட்டாமல் எஸ்கேப் ஆனவர் தான் நடிகை ஸ்ருதிஹாஸன். சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்த ஸ்ருதிஹாஸனிடம் தான் யோஹான் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் யோஹானின் இசையமைப்பாளர் என்கிறது சினிமா வட்டாரம்.