Thursday, July 19, 2012

சாமியார் மடங்களைத் தேடி ஓடும் பிரபல நடிகைகள்!






போலிச்சாமியார்கள், பிரம்மச்சரியம் பேசியபடி நடிகைகளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகவாதிகள் பற்றியெல்லாம் தொடர்ந்து செய்தி வந்தாலும், ஏனோ நடிகைகளும் ஆன்மீகமும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன(ர்)!
சரி அது அவ ர்கள் பாடு...
பிரபல நடிகைகள் ஸ்ரேயாவும் தனுஸ்ரீ தத்தாவும் இப்போது ஆன்மீகத்தில் ஏகத்துக்கும் மூழ்கிவிட்டார்கள்.
இருவரும் தற்போது அதிகமாக காணப்படும் இடம் கோவையில் உள்ள ஒரு தியான மையம்.
ஸ்ரேயா ரொம்ப நாட்களாகவே இந்த தியான மையத்துக்கு வந்து தங்குகிறார். மன அமைதிக்காக இங்கே வருவதாகவும் திரையுலகை தாண்டிய புது உலகை இந்த இடம் அவருக்கு காட்ட� �வதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இப்போது, புதிதாக சந்நியாசத்துக்கு மாறியுள்ள தீராத விளையாட்டுப் பிள்ளை பட நாயகி தனுஸ்ரீ தத்தாவும் இந்த தியான மையத்துக்கு வர ஆரம்பித்துள்ளாராம்.
தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ள தனுஸ்ரீ, சினிமாவில் எவ்வளவோ துரோகங்கள், கொடூரங்களைப் பார்த்து வெறுத்துப்போன தனக்கு இந்த யோக மையத்தில் நிம்மதி கிடைத்ததாகக் கூறியுள்ளார்.
� �ூமிகா ஏற்கெனவே பாதி சாமியாராகிவிட்டார்,
இவர்கள் பட்டியலில் விரைவிலேயே நயன்தாரா, லட்சுமி ராய் ஆகியோரும் சேரக்கூடும் என்கிறார்கள்.
ரஞ்சிதா, ராகசுதா லிஸ்ட்ல சேராம இருந்தா சரி...!
.






பில்லா 2 தற்போதைய டாக்..!லாபமா, நஷ்டமா..!







தமிழ் சினிமா ஆர்வலர்களின் தற்போதைய டாக் எதுவென்றால் 'பில்லா 2' லாபம் தருமா அல்லது நஷ்டம் ஏற்படுத்துமா என்பது தான்.

அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படம் முதல் நாள் வரி நீங்கலாக 7.61 கோடி கல்லா கட்டியது.

லாபமா, நஷ்டமா என்று பார்த்தா� ��் படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


எப்போதுமே ஒரு படத்தினை தயாரித்தாலோ, விநியோகித்தாலோ லாபமும் எனக்குத் தான், நஷ்டம் வந்தாலும் எனக்குத் தான் என்கிற பாணியில் படங்களை வெளியிடுவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கம்.

'அந்நியன்', 'தசாவதாரம்' போன்ற மெகா பட்ஜெட் படங்களை இவ்வாறு வெளியி ட்டு லாபமும் அடைந்தார். ஆனால் தற்போது பில்லா 2 இவருக்கு 1 முதல் 5 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தும் என்கிறது கோலிவுட்.

காரணம், 'பில்லா 2' படத்தின் முதல் நாள் 7.61 கோடி, இரண்டாம் நாள் 5.23 கோடி, மூன்றாம் நாள் 4.92 கோடி என்று சரிவதாலும், படத்தினைப் பற்றி இருவேறு விமர்சனங்கள் உலா வருவதாலும் படம் நஷ்டம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

மேலும், படத்தின் வசூல் வரும் வாரங்களில் � �டுமையாக சரியும் என்ற பேச்சு நிலவி வருகிறது.
.
.





பக்கத்திலேயே தமன்னா..!மீட் பண்ணாத 'சகுனி' .







'பையா', 'சிறுத்தை' என்ற இருபடங்களில் ஜோடி போட்டு நடித்ததால், கார்த்தியும் தமன்னாவும் காதலிக்கிறார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள்.

இந்த ஜோடி ராசியானது மட்டுமல்ல, வசூலைக் குவிக்கும் ஜோடி என்று தயாரிப்பாளர்கள் அவர்களை முற்ற� �கையிட்டாலும், தமன்னா தெலுங்கில் பிஸியாகிவிட்டார்.


கார்த்திக் திருமணம் முடிந்து தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

"கார்த்தி திருமணத்தில் கூட தமன்னா கலந்து கொள்ளவில்லை. தமன்னாவும் 'சிறுத்தை' படத்தினைத் தொடர்ந்து தனுஷுடன் 'வேங்கை' படத்தில் நடித்தார், அவ்வளவு தான் தமிழ் சினிமா ரசிகர்களை கைகழுவி விட்டு தெலுங்கு சினிமா ரசிகர்களை க ுஷிப்படுத்த சென்று விட்டார். " என்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் 'சகுனி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அப்படப்பிடிப்பிற்கு பக்கத்திலேயே தமன்னா நடித்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று இருக்கிறது.

ஆனால் இருவருமே சந்தித்து கொள்ளவே இல்லை. இருவருமே தங்களது படப்பணிகளில் கவனமாக இருந்தார்களாம். அது!