Monday, July 23, 2012

காம்பினேஷன் புட்டுக்கிச்சு... சூர்யா தந்த திடீர் ஷாக்







மாற்றானும் ஹிட்டாகிவிட்டால் சூர்யாவின் ஒவ்வொரு நரம்பும் எலும்பாகிவிடும்என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் சிலர். தங்களுக்கு கால்ஷீட் தரவில்லையே என்ற ஆதங்கத்திலும் ஆத்திரத்த ிலும் அவர்கள் இப்படி பேசி வருவது இயற்கையே.

ஆனால் இப்படியெல்லாம் பேச வைக்கிற அளவுக்கு அந்த வயிற்றெரிச்சலில் மேலும் சில சுள்ளிகளை போட்டு அந்த தீயை வளர்த்துக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. அதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒரு தகவல் இப்போது.

புகழ் பெற்ற கோவிலின் பெயரை தன் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் அந்த இயக்குனர் சமீபத்தில் சொந்தப்படங்களை எடுத்து வெற� �றியும் பெற்றுவருகிறார். திடீரென்று இவர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம் சூர்யா. இதை தொடர்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் டைரக்டர். எல்லாம் சில வாரங்கள்தான்.

சட்டென்று அவரை அழைத்த சூர்யா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் கொடுக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஸாரி... என்று கூறிவிட்டாராம்.

திருப்பதி ஏழுமலையானே, சிலருக்கு நிலையான யோசனையை க� ��டு என்று வேண்டிக் கொண்டிருக்கிறது மொத்த கம்பெனியும்.





குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா: ரசிகர்கள் ரத்ததானம்







நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கெண்டாடினார். அவர் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் 'மாற்றான்' பட வேலைகளில் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். பிறந்தநாளையொட்டி அவற்றை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தியா கராயநகரில் உள்ள வீட்டில் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.


நடிகர், நடிகைகள் பலர் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தனர். சூர்யா பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடந்தது. திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன் தலைமையில் 100 பேர் ரத� �ததானம் செய்தார்கள்.

சூர்யா பிறந்ததின 10-வது ரத்ததான முகாமாக இது நடத்தப்பட்டது. இதுவரை 1000 பேர் ரத்ததானம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ரத்ததான முகாமை திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ரத்ததான முகாமில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஆர்.கே. சந்திரரேஷ், பி.விவேக், சங்கர், எஸ்.தாமு, வி.கிஷோர், சுனில், ரஞ்சித், உள்ளிட்ட பலர் பங்கேற்ற� �ர். ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

பிறந்த நாளையொட்டி சூர்யா அளித்த பேட்டியில் ஒரு வருடமாக 'மாற்றான்' பட வேலைகளில் தீவிரமாக இருந்ததால் குடும்பத்தினருடன் செலவிட முடியவில்லை. பிறந்த நாளையொட்டி இன்று முழுவதும் அவர்களுடன் இருப்பேன் என்றார்.





என் மகன் ஜீவாவின் தீவிர ரசிகன்: விஜய்







முகமூடி இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தனது மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. அந்த படத்தின் இ� �ை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் விஜய் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசை சிடியை விஜய் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.


இந்த விழா நடந்த அரங்கிற்குள் விஜய் நுழைந்தது முதல் மேடையில் அமரும் வரை அவரது ரசிகர்கள் விசில் அடித்தும், கை தட ்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது ஜீவா நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு என்பதை அனைவரும் மறந்துவிட்டனர். மேடையில் பேசியவர்கள் கூட ஜீவாவை மறந்துவிட்டு விஜய் பற்றியே பேசினர். உடனே சுதாரி்த்துக் கொண்ட விஜய் பேச வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், என் மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன். எனக்கு ஜீவாவை ஒரு மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும். என் மகனைப் ப� ��ன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜயைப் புகழ்ந்து பேசினாலும் விழா நாயகன் ஜீவா சிரித்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.





திரிஷாவைப் பார்க்க 13 படி... ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம்!







திரிஷா பிறந்தபோதே சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர். பிறந்தபோதே வசதியாக இருந்த அவர் இப்போது திகட்டும் அளவுக்கு செல்வச் செழிப்புடன் சீமாட்டியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் தன் விருப்பத்திற்கேற்ப பல அலங்காரங்களை செய்திருக்க� ��றார்.
அதில் லேட்டஸ்டாக தனது வீட்டுக்குள்ளிருந்து தனது அறைக்குப் போக உள்ள 13 மாடிப்படிகளையும் பெரும் பொருட் செலவில் மார்பிள் கற்களால் தகதகக்க வைத்துள்ளாராம்.
திரிஷாவின் அறை உள்ள மாடிக்குப் போக கீழ் தளத்திலிருந்து 13 படிகளைக் கடக்க வேண்டுமாம். இந்தப் படிகளை விலை உயர்ந்த மார்பிளால் அலங்கரித்துள்ளாராம் திரிஷா. ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மார� �பிளைப் போட்டு ஜொலிக்க விட்டுள்ளாராம் திரிஷா.
இதுதவிர இவரது அறையையும் கூட மார்பிள் கற்கள் பளபளப்பாக மாற்றியுள்ளதாம். எல்லாமே திரிஷாவின் விருப்ப்படி ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாம்.
அறைக்குள் யாருடைய போட்டோவை மாட்டி வைத்திருக்கிறீர்கள் திரிஷா...!!