Tuesday, July 24, 2012

இளைய தளபதி... இளைய தளபதி... -ஏலம் போட்ட மிஷ்கின்







எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்துஅழைப்பவரையும் அவமானப்படுத்திவிட்டு போவது பிரபலங்கள் சிலரது வழக்கம். தங்கர்பச்சானை விழாக்களுக்கு அழைக்கும் போதே, 'சார்... சப்ஜெக்ட்டை விட்டுட்டு வேற விஷயத்தை � �ேசிடாதீங்க' என்றே அழைப்பார்கள். அப்படியும் வந்த வேலையை திறம்பட செய்யாமல் நகர்ந்தே இல்லை அவர்.

கடந்த வாரம் நடந்த 'முகமூடி' ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு பிரச்சனை. ஆனால் அது பிரபலங்களால் ஏற்பட்டது அல்ல. ரசிகர்களால்! ஆடியோவை வெளியிட வந்திருந்தது இளைய தளபதி விஜய் ஆச்சே? கூடி கும்மாளமடித்துவிட்டார்கள் ரசிகர்கள். யார் பேச எழுந்தாலும் 'இளைய தளபதி... இள ைய தளபதி...' என்று அவர்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்க, எல்லாருடைய பேச்சிலும் வேகத்தடங்கல்!

விஜய் பேசி முடித்துவிட்டு வெளியே கிளம்புகிற நேரத்தில் அவர் பின்னாலேயேஓடினார்கள் ரசிகர்கள். ஒரே தள்ளுமுள்ளு. விஜய்யை பார்க்கிற ஆர்வத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த படத்தின் ஹீரோ ஜீவாவையும் தள்ளிவிட்டு ஓடியதுதான் அன் சகிக்கபுள் சமாச்சாரம். கீழே விழுந்தாலும் � �ீசையில மண் ஒட்டலே என்று சமாளிக்க முடியாதே? கர்புர்ரென்று கத்தித் தீர்த்துவிட்டார்.


ஜீவாவின் கோபம் இது என்றால், விஜய்யின் கோபம் வேறு மாதிரி. கூட்டத்தில் மிஷ்கின் பேச வந்தபோதும் இதே போல ரசிகர்கள் குரல் கொடுக்க, 'யப்பா... உங்களுக்கு இளைய தளபதின்னு சொல்லலணும். அவ்வளவுதானே? இதோ கேட்டுக்கங்க. இளைய தளபதி... இளைய தளபதி... இளைய தளபதி... சொல்லிட்டேன். இனிமேலாவது பேச விடுங்கப ்பா' என்றார் கோபத்தோடு.

தன்னை மேடையில் உட்கார வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் லந்தடிக்கிறாரே என்று மிஷ்கின் மீது பிற்பாடு பொசபொசவானாராம் விஜய்.





அனுஷ்கா கால்ஷீட்டை வீணடிக்கவில்லை - செல்வராகவன்







சென்னை: இரண்டாம் உலகம் படத்துக்கு அனுஷ்கா கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்' படம் ஆர்யா, அனுஷ்காவா ல் தாமதம் ஆவதாக கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் 'இரண்டாம் உலகம்' படத்துக்கு இவர்கள் ஒதுக்கிய தேதிகளை செல்வராகவன் விரயம் செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் வேறு படங்களில் நடிப்பதால் தங்களது கால்ஷீட்டை மாற்றி விட்டதாகவும் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல் செல்வராகவன் தவிப்பதாகவும் கூறப்பட்டது.
குறிப்பாக, இந்தக் குழப்பத்தால் கார்த்தி நட� ��க்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்காவால் நடிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
'இரண்டாம் உலகம்' படக்குழுவினர் செல்வராகவனுடன் தற்போது ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா வருகைக்காக அவர்கள் காத்திருப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஆர்யா, அனுஷ்காவால் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக வெளியான செய்திகள் அப த்தமானவை. ஆர்யாவும், அனுஷ்காவும் இப்படத்தில் நடிக்க நிறைய தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர்கள் ஒதுக்கிய கால்ஷீட்டை நாங்கள் விரயமாக்கவில்லை. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கிறது. அவர்கள் எங்களுடன்தான் உள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவில் அமலா பாலின் அமர்களம் ..!







நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். 
அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்� ��ிய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இ� �ிய தருணங்களாக அமைந்தது. என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.