Monday, July 30, 2012

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: 4 படங்கள் போட்டி







தமிழில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நான்கு படங்கள் தயாராகின்றன. இவற்றில் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.

சூர்யா 'மாற்றான்' படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார்.
நாயகி காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 9-ந்தேதி சிங்கப்பூரில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

'சாருலதா' என்ற படத்தில் பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக வருகிறா ர். பொன்.குமரன் இயக்குகிறார். அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

'இருவன்' என்ற பெயரில் இன்னொரு ஒட்டிப்பிறந்த இரட்டையர் படம் தயாராகி உள்ளது. முருகானந்தம் இயக்கி உள்ளார். உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் உண்மை கதை என்று விளம்பரப்படுத்தி உள்ளனர்.

மலையாளத்தில் 1997-ல் 'இரட்டதல' என்ற பெயரில் ரிலீசான ஒட்டிப்பிறந்த இரட்டையர் படத்தை தமிழில் ட ப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது.
.





மனைவியாக இருக்க விருப்பமில்லை’ - சினேகா அதிரடி!






கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) "சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா" சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மக� �், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான சினேகாவும்-பிரசன்னாவும் ஆடி மாதமென்பதால் பிரிந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

இருவரும் பிரிந்திருக்கும் இந்த சமய� ��்தில் சினேகா "எனக்கு பிரசன்னாவுடன் மனைவியாக இருக்க விருப்பமில்லை" என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகாவின் கேள்விகளும்  பதில்களும் :-

"போன வருடமும் நீங்கள் பிரசன்னாவுடன் ஜோடியாக நடந்து வந்தீர்கள். இப்போது கணவன் மனைவியாக நடந்து வரும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?"

போன வருஷம் நாங்க இந்த நி கழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்.

"பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?"

பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்.

"கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படத்துல நீங்க இ� ��ெண்டு பேரும் ஜோடியா சிறப்பு தோற்றத்துல நடிக்கிறதா பேசிக்கிறாங்களே?"

அதுபற்றி இன்னும் முடிவாகல. பேசிகிட்டு இருக்கோம். முடிவு எடுத்ததும் கண்டிப்பா சொல்றேன்





ரணமான பில்லா 2...! குடைந்து எடுத்த ''ஈ ''






பில்லா 2 வெளியானதால் நான் ஈ படத்தை மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்குக்கு மாற்றின. தனி திரையரங்குகள் படத்தையே மாற்றின. ஆனால் இரண்டாவது வாரத்திலேயே காட்சிகள் மாறத் தொடங்கின.

பில்லா 2 ஒரே வாரத்தில் ஓரங்கட்டப� �பட்டதால் மீண்டும் நான்ஈ-க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் திரையரங்குஉ‌ரிமையாளர்கள்.


தமிழகம் முழுவதும் 180 தியேட்டர்களில் நான் ஈ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திலிருந்து பல மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்கிலிருந்து பெ‌ரிய திரையரங்குக்கு நான் ஈ-யை மாற்றியுள்ளன.

அதேபோல் தனி திரையரங்குகள் மீண்டும் நான் ஈ-யை திர� �யிட்டுள்ளன. வெளியான போது இருந்ததைவிட இப்போதுதான் இந்த தெலுங்கு டப்பிங்குக்கு அதிக வரவேற்பு. இதுவொரு படிப்பினை. சின்ன ஈ தானே என்று எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.





'பிறந்த நாள் விருந்தெல்லாம் ஓகே.. மனைவி எங்கேப்பா?'







ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!
நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் க� �வலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்ல� �ம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.
இருக்கட்டும்.
28ம் திகதி தனுஷுக்குப் பிறந்த நாள். பிறந்த நாளையொட்டி அன்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தம� �்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.
சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!





தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் : .







எதிர்பாராமல் புறப்பட்டு வந்து இதயங்களை பிடித்தவர் தனுஷ். நேஷனல் அவார்டு இவ்வளவு இளம் வயதில் என்பது இதுவே முதல் தடவை என்கிறார்கள். தனுஷ் பற்றி கொறிக்க கொஞ்சம் தகவல்கள்:

தேனி சொந்த ஊராக இருந்தாலும் சார் பிறந்து வளர்ந்தது எல்லாம் ச� ��ன்னைதான். சாதாரண ஸ்கூலில் படித்து, சாதாரணமான ஆவ்ரேஜ் ஸ்டூடண்ட் ஆக இருந்து +2 முடித்தவர். அதற்கு மேல் அய்யாவிற்கு படிப்பு ஏறவில்லை.


அக்கா டாக்டர் படிப்பு, அண்ணன் இன்ஜினியரிங் என முடித்திருந்தாலும் தனக்கு படிப்பு ஏறவில்லை என்பதில் தனுஷ்சிற்கு கொஞ்சம் வருத்தமே. ஆனால் பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அப்ப ா, அம்மா வைத்த பெயர் வெங்கட் பிரபு. இன்னமும் அம்மா தனுஷ்சை அழைப்பது செல்லமாக பிரபு என்றுதான் அக்காக்கள் செல்லமாக கூப்பிடுவது 'குட்டி' என.

பைக் பிரியர். ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடமாட்டம் இல்லாத சாலையில் அதிவேகத்தில் பறந்து கொஞ்சம் தூரம் போவது அவரது பொழுதுபோக்கு.

குழந்தைகளை மீடியா போர்வையிலிருந்து பாதுகாத்தே வைத்திருக்கிறார் தனுஷ். எங்கே வெளியே கிளம்பின ாலும் குழந்தைகள் வீட்டில் இருக்க விட்டுத்தான் போவது வழக்கம்.

கடவுள் பக்தர். தீவிரமான ஆன்மீகவாதி. தினமும் காலையில் பூஜை புனஸ்காரம் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை.

வீடு, அலுவலகம் என எங்கே ரசிகர்களை பார்த்தாலும் போட்டோ எடுத்துக்கொள்ள ஆவலோடு முன்வருவார். பள்ளிக்கூட மாணவர்கள் என்றால் 'போங்கய்யா, படிக்கப்போங்க' என விரட்டுவார்.

அரசியல் ஆர்வம் மூச்! எதுவ ுமே கிடையாது. ஆனால் என்ன நடக்கிறது என விரல்நுனியில் வைத்திருப்பார். எந்தச் சமயத்தில் யாருடன் பேசினாலும் அரசியல் பற்றி மூச்சு விட மாட்டார்.

நெருங்கிய பத்திரிக்கையாளர்களுக்கு கூட அலைபேசி நம்பரை தரமாட்டார். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என்றுதான் எண்ணைப் பெற முடியும். மீடியாவை தேவைப்படும்போது மட்டும் மதிக்கிற குணம்.

மனைவி, ஐஸ்வர்யா டைரக்ஷனில் இறங்கியபோது 'வெரிகுட்' சொன்னது தனுஷ்தான். மனைவிக்காக டிஸ்கஷன் முதற்கொண்டு, தயாரிப்பு நிர்வாகம் வரைக்கும் இறங்கி வேலை பார்ப்பார் தனுஷ்.

இரண்டு குழந்தைகளுமே தாத்தா ரஜினியின் செல்லம்தான். எந்த நேரமாக இருந்தாலும் திடீர் திடீரென வந்து பேரனை கொஞ்சிவிட்டு போவார் ரஜினி. ராத்திரிகளில் கூட குழந்தைகள் தாத்தாவை கேட்டு அழுதால் ஆஜராவார் ரஜினி.

தனுஷ் அம்மா செல்லம். எவ்வளவு வேலை இருந்தாலும் அம்மாவோடு தினமும் பேசிவிடுவார். ஊரில் இருந்தால் ஞாயிறுக்கிழமை அண்ணன், அக்காவோடு சேர்ந்து சாப்பிட்டு அட்டகாசமாக சிரித்து மகிழ்வார்கள். அந்த மீட்டிங்கில் சினிமாவைப் பற்றி பேசுவது கிடையாது.

குறைவாக சாப்பிடுவார். ப்யூர் வெஜிடேரியன். நான்&வெஜிடேரியன் அயிட்டங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு புருவங்களை உயர்த்தி � �த்து இட்லி சாப்பிட்ட மாதிரி பிரமிப்பார்.

தனிமை விரும்பி. அதிகமான நண்பர்கள் கிடையாது. நடிகர்களிலும் பெரிதாக நண்பர்கள் கிடையாது. வெற்றிமாறன் உள்ளிட்ட ஒரு சில டைரக்டர்களிடம் கொஞ்சம் வெளிப்படையாக பழகுவார்.

இப்போதுதான் பார்ட்டிக்கு அடிக்கடி போகிறார். ஆனால் அங்கேயும் 'அடக்கமாக' இருப்பதுதான் அவர் வழக்கம்.

உடை விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தவரை அடியோட� � மாற்றியது மனைவி ஐஸ்வர்யாதான். இப்போது அய்யா கோட் சூட் என பின்னி எடுப்பதின் ரகசியமும் அதுதான். எப்போதும் அவருடைய டிசைனர் ஐஸ்வர்யாதான்.

தங்க நகைகளை விரும்ப மாட்டார். ஆர்வமும் கிடையாது. இப்போது சின்னதாக ஒரு நெளி மோதிரம் மின்னிக் கொண்டு இருக்கிறது யார் போட்டதோ!

கிசுகிசு என வந்தால் அதற்கு பதில் சொல்கிற வழக்கமே தனுஷ்சிடம் கிடையாது. ஸ்ருதியோடு இணைத்து பேசுகிறா ர்களே எனக் கேட்டால் அப்படியா, சும்மா பேசுறாங்க சார்! என அப்பாவியாக சொல்லிவிட்டு கேள்வியை முடித்துவிட்டு நெக்ஸ்ட் சார்' என்பார்.

தன்னைப்பற்றிய பேட்டிகள் வந்தாலும், அதை அடையாளம் கண்டு 'தேங்க்ஸ் சார்' சொல்கிற பழக்கம் ஆரம்பத்தில் மட்டும் இருந்தது. இப்போது எங்கே பார்த்தாலும் 'எப்படி இருக்கீங்க' என ஒரு வார்த்தையோடு புன்னகை இலவசம்.

இவ்வளவு இளம் வயதில் நேஷனல் � ��வார்டு வாங்கியது இவர்தான் என தகவல்கள் சொல்கின்றன.

'கொலவெறி' பாட்டின் மூலம் உலக அளவிற்கு பிரபலம் ஆனார் தனுஷ். ஏராளமான நடிகர்களை காதில் புகை விட வைத்தார் தனுஷ்.

தனுஷ்க்கு பில்லியர்ட்ஸ்தான் உயிர். வீட்டிலேயே அதற்கான கோர்ட் வைத்திருக்கிறார். அதில் பெரிய அனுபவம் பெற்றவர். கிரிக்கெட்டுக்கும் அடிமை.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்தில் வந்து சேர்வார். ர ொம்ப கலகலப்பாக இருக்காமல், கேரக்டருக்கு தகுந்த மாதிரி இருந்துகொண்டு புத்தகங்கள் படித்துக் கொண்டு இருப்பார்.

நிறைய பாடல்கள் எழுதி வைப்பது அவரது பொழுது போக்கு. அப்படி எழுதியவற்றை படித்த பிறகுதான் செல்வராகவன் அவரை, பாடல் எழுத வைக்கவும், பாடகராகவும், அனுமதித்தார்.

கார்களின் காதலன். அவரேதான் பெரும்பாலும் டிரைவ் செய்வார். எந்தக் கார் இறக்குமதி ஆனாலும் அதைப்ப� ��்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்.