Tuesday, July 31, 2012

முதலில், உடம்பை குறைங்க...!'' .





மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த கதாநாயகிக்கு கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல்வாகு தான். படத்துக்கு படம் அவருடைய சம்பளம் ஏறுவது போல், உடல் எடையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் அவரை சந்தித்த ஒரு பட அதிபர், "சம்பளத்தை மட்டு� ��் ஏத்துறீங்க. உடம்பை கவனிக்க மாட்டேன்கிறீர்களே...முதலில் உடம்பை குறைங்க'' என்று அறிவுரை சொன்னாராம். "ஓகே...ஓகே...பார்க்கலாம்'' என்றாராம் அந்த நடிகை!





பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!







"சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.
இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம்.
தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.
இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லா வைத் திரையிட்டார்களாம்.
பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.
இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!
காசி தியேட்டர் என்றல் ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!





அவரைதான் கட்டிக்குவேன்:அடம் பிடிக்கும் அஞ்சலி







திடீரென்று அஞ்சலிக்கும் 'லவ்' வந்துவிட்டது. நான் அவரைதான் கட்டிக்குவேன்என்று அடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம் அவர். இதனால் கதி கலங்கிப் போயிருக்கிறது சொந்த வீடு.

இதே கதிகலக்கம் இன்னொரு வீட்டிலும்! ஏன்? அஞ்சலி காதலிப்பதே அந்த � ��ீட்டு ஐயாவைதானே? அரசியலில் ஓரிடத்தை பிடித்துவிட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் மனைவி, தன் புருஷனின் இந்த புரட்டு வேலையை ஏதோ ஜாலிக்கு இருக்கும் என்று முதலில் சட்டை செய்யாமலிருந்திருக்கிறார்.


இப்போது விஷயம் முற்றி விஷம் போலேறிவிட்டது. சமாளிக்க முடியாமல் திருதிருவாகி திரிகிறாராம். லம்ப்பாக சில 'சி' க்களை தள்ளியாவது 'சி' யை மீட்க முடியுமா என்று பா� ��ுங்கம்மா...
.