Wednesday, August 1, 2012

நம்பரை கொடுத்துராதீங்க... -ஸ்ரேயா கெஞ்சல்!







சமீபத்தில் சென்னைக்கு வந்த ஸ்ரேயா 'சந்திரா' படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில் ஒன்றுதான் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அவரை.

ரஜினி சார் கூடவே நடிச்சுட்டேன். அப்புறம் யார் கூட நடிச்சா என்ன, நடிக்கலைன்னா என்ன? கதை நல்லாயிருந்தா போதும். யார் கூட வேணும்னாலும் நடிக்கலாம்.
அது புதுமுகமா இருந்தாலும் எனக்கு ஓகேதான் என்றார் கேஷுவலாக. அது போதாதா?

எருமைப் பாளயத்திலிருந்து ஏகாம்பரம் பேசுறேங்க... நம்ம கூட ஒரு படத்துல நடிக்கலாமே என்கிற ரீதியில் ஏகப்பட்ட 'அன் நோன்' கால்கள் வருகிறதாம் அவருக்கு. அடிக்கடி சென்போன் நம்பர்களை மாற்றிக் கொண்டிர ுந்தாலும், எப்படியோ மோப்பம் பிடித்து போன் அடித்துவிடுகிறார்களாம் சில புது இயக்குனர்கள்.

சமீபத்தில் தனக்கு நெருக்கமான சில புரடக்ஷன் மேனேஜர்களை தொடர்பு கொண்ட ஸ்ரேயா, 'அண்ணேய் புண்ணியமா போவும். என் நம்பரை தயவு செய்து எங்கேயும் கசிய விட்றாதீங்க' என்கிறாராம்.

கேட்கும்போதே கிறுகிறுன்னுதான் வருது...





கார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி தடியடி... தள்ளுமுள்ளு...






கிரிக்கெட் என்றால் ஆர்வத்தோடு அது பற்றி சிலாகிக்கும் நம்ம ஊர் ஹீரோக்களில் கார்த்தி ரொம்பவே வித்தியாசமானவர். நமது பாரம்பரிய விளையாட்டான கபடிக்கும் மரியாதை கொடுப்பவர். சில தினங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மிகப்பெரிய கபட ிப் போட்டி நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வீரர்களுக்கும் வீராங்கனைக்கும் பரிசளித்தார்.


கார்த்தி வருகிறார் என்றதும் அப்பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். அவரை பார்க்கும் ஆசையில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிலரால் கேலரி சரிந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் வேறு! இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன கார்த்தி, 'எல்லாரும் அம� ��தியா இருங்க. நானே உங்க இடத்துக்கு வர்றேன்' என்று கூறிவிட்டு அந்த கேலரியை சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தார்.

இவ்வளவு ஸ்போர்ட்டிவாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி. கார்த்திக்காக போடப்பட்டிருந்த இருக்கையின் இருபுறத்திலும் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் அமர்ந்திருக்க, அவர்களிடம் பேசினாலும் சிக்கல். பேசாவிட்டாலும் சி� �்கல். தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசப்படுமே என்று அஞ்ச ஆரம்பித்துவிட்டார் அவர்.

இவர்கள் இல்லையென்றால் அதிக நேரம் இருந்திருப்பாரோ என்னவோ? சட்டென்று கிளம்பி, விர்றென பறந்தேவிட்டார்.