Saturday, August 4, 2012

கமலின் ஹாலிவுட் படத்தில் சூர்யா! .







மாற்றான் படத்தில் இரு வேடங்களில் கன்ஜாய்ண்ட் ட்வின்ஸாக நடித்திருக்கும் சூர்யா மொத்தம் 2500 காட்சிகள் நடித்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் இரு கதாபாத்திரங்களுக்காக இரண்டு முறை நடிக்க வேண்டும்.
அதிலும் சரியாக வராத காட ்சிக்காக ரீடேக் எடுக்கவேண்டும் என படத்தில் மொத்தம் 2500 காட்சிகள் சூர்யாவின் பங்கு.

சூர்யாவின் கடின உழைப்பை வீணாக்கக் கூடாது என்ற முடிவில் படத்தின் எடிட்டிங்கில் கவனத்துடன் இருக்கிறது மாற்றான் டெக்னீஷியன் யூனிட். மாற்றானுக்குப் பிறகு சிங்கம் -2 படத்தில் சூர்யா நடிக்கிறார் என்றிருந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படம் ஹாலிவுட் படமாக இருக்கலாம் என பரபரக்கிறது க� ��டம்பாக்கம்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பார்ன் தயாரிப்பில் நடிகர் கமலஹாஸன் இயக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் சூர்யாவை நடிக்கவைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் கமலஹாஸன். திரைத்துறையில் கமலஹாஸனுக்கும் சூர்யாவிற்கும் இடையே நல்ல புரிதல் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

சூர்யாவின் கடின உழைப்பை வாழ்த்தி சூர்யாவிற்கு உடற்பயிற்சி கருவிகளை கமல் பரிசளித� �தது, சூர்யாவின் நடிப்பை பாராட்டும் முதல் ஆளாக கமல் இருப்பதுமே அதற்கு சான்று. மாற்றான் படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்டு 9-ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது.





லிங்குசாமியுடன் மீண்டும் இணைகிறார் அஜீத்?







இயக்குநர் லிங்குசாமி தன் படங்கள் குறித்து எப்போது பத்திரிகையாளர்களிடம் பேசினாலும், ஒரு படத்தைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார். அந்தப் படம் அஜீத் நடித்த ஜீ!
2005-ல் அஜீத் - த்ரிஷா நடிப்பில் உருவான இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் நல்� �� பாடல் கூட உண்டு.
ஆனால் படம் படு சுமாராகப் போனதால், ஹீரோ அஜீத்தும் சரி, இயக்குநர் லிங்குசாமியும் சரி.. இந்தப் படத்தை மறக்க விரும்புவது இயல்புதான்.
ஆனால் இப்போது இந்த இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அஜீத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இயக்குநர� � லிங்குசாமி இதுபற்றிக் கூறுகையில், "அஜீத்துடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆசைதான். ஆனால் அதற்கு நல்ல ஸ்க்ரிப்ட் வேண்டும். அஜீத்துக்கு ஏற்றமாதிரி அமைய வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இப்போது சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கும் வேலையில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி.





தென்னிந்திய நாயகிகளை பாடாய்ப்படுத்தும் பாலிவுட் மோகம் .






வட இந்திய நடிகைகளின் ஆட்சி தென்னிந்திய திரையுலகில் நடக்கையில் இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்றவர்களின் நிலையை சற்று அலசிப் பார்ப்போம்.

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த அசின் சூர்யாவுடன் இணைந்து நடித்த க ஜினி இந்திக்கு போனது.
இந்தியில் சூர்யாவுக்கு பதில் ஆமீர் கானை நடிக்க வைத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நாயகியாக அசினையே மீண்டும் தேர்வு செய்தார். அந்த படம் சூப்பர்டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசினுக்கு கோலிவுட் கசந்து பாலிவுட் இனித்தது.

இதையடுத்து சல்மான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் ஓரளவுக்கு ஓடியது. மீண்டும் அவருடன் சேர்ந்து நடித� ��த ரெடி சூப்பர் ஹிட்டானது. அண்மையில் வெளிவந்த ஹவுஸ்புல் 2வும் ஹிட்டானது.

இத்தனை ஹிட் கொடுத்தாலும் அசினைக் கொண்டாட அங்கே ஆளில்லை. நான் ஹிட் நடிகை என்று பாவம் அவரே சொல்லிக் கொண்டு திரிகிறார். அவரைக் கண்டால் பாலிவுட் நடிகைகளுக்கு ஏதோ காமெடி பீஸைப் பார்ப்பது போன்று உள்ளது என்று முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இந்த விஷயம் அவருக்கு தெரியுமோ என்னமோ?

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் அவர் நடிகையாக ஆனார். ஆனால் லக் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து பொட்டியைக் கட்டிக் கொண்டு தமிழுக்கு வந்த அவர் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு ஹிட்டானது. இதற்கிடையே தெலுங்குப் பக்கம் போன அவரின் படங்கள் ஓடாமல் இருந்தன. அப்போது தான் கப்பார் சிங் வெளியாகி கண்டமேனிக்கு ஓடியுது. இதையடுத்து ஸ்ருதிக்கு தெலுங்கிலும் கிராக்கி அதிகரித்தது.

தனுஷுடன் 3 படத்தில் நடித்து முடித்ததோடு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு போய்விட்டார். அவரையும் பாலிவுட் மோகம் விடவில்லை. இந்தி படங்களில் வாய்ப்பு தேடுகிறார்.

காஜல் அகர்வால்

ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு நடிகர்களிடம் காஜல் பெயரைச் சொன்னால் சமத்துப் பொண ்ணு என்பார்கள். ஹீரோ லேட்டா வந்தாலும் கூட எத்தனை மணிநேரமானாலும் காத்திருந்து நடித்துக் கொடுப்பவர்.

தெலுங்கில் பெரிய நடிகையான காஜல் தற்போது தமிழில் விஜய், சூர்யா, கார்த்தியுடன் நடிக்கிறார். இதற்கிடையே சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் நடித்தார். படம் என்னமோ ஹிட் தான். ஆனால் காஜலைத் தான் திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை.

வாய்ப் பு கொடுக்கவும் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார். அப்படியாவது யாராவது பாலிவுட் இயக்குனர் வாய்ப்பு தர மாட்டாரா என்ற நப்பாசை தான்.

இலியானா

இவர் கதை பெரும் கதை. ஆனால் அதை சுருக்கமாக சொல்கிறோம். தெலுங்கில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி கொடி கட்டிப் பறக்கும் இலியானாவையும் பாலிவுட் மோகம் வி்ட்டு வை க்கவில்லை.

அவரும் நல்ல நாள் நேரம் பார்த்து மும்பைக்கு போனார். பர்பி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் நாயகன் ரன்பிர் கபூர். ஆனால் படத்தில் பாலிவுட் ராணி பிரியங்கா சோப்ராவும் உள்ளார். அப்பொழுது யாருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். இநத படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. ஆனால் இந்த படம் இ ந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போனது. இலியானாவின் முதல் இந்தி படத்தை சீக்கிரம் வெளிவர விடாமல் பிரியங்கா தான் இழுத்தடிக்கிறார் என்று பேச்சு அடிபட்டது.

இதற்கிடையே பிரியங்காவுக்கும், இலிக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. ஆனால் நாங்கள் எல்லாம் தோழிகளாக்கும் என்று ஒரு போட்டோவை எடுத்து வெளியிட்டார்கள். போட்டோவைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிடுவார்களா என்ன. இத்த� ��ையும் தாண்டி ஒரு வகையாக பர்பி வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு தான் இலியானாவின் பாலிவுட் பயணம் தொடருமா, புஸ்ஸாகுமா என்று தெரியும்.

த்ரிஷா

பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் த்ரிஷாவுக்கும் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து பிரியதர்ஷனின் கட்டா மீட்டா என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்தார். அந்� � படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.

அந்த படத்தைப் பார்த்த இந்தி ரசிகர்கள் த்ரிஷாவைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் தமிழ் ரசிகர்களோ இந்த உப்பு சப்பில்லாத கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் பாலிவுட் போனாருக்கம் என்றார்கள். அந்த படத்திற்குப் பிறகு வேறு ஏதாவது இந்திப் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. � ��ண்மையில் மூத்த நடிகரான சஞ்சய் தத்துடன் நடிக்க அழைத்தார்கள்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி அந்த வாய்ப்பை தட்டிக்கழித்தார். உண்மையிலேயே கால்ஷீட் பிரச்சனை தான் காரணமா?