Sunday, September 16, 2012

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம் படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்
படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

சென்னை, செப். 15-

மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கவுரவம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமிகவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்ப ாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமிகவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமிகவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.

அப்போது நிலை தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் படக்குழுவினர் பதறினார்கள். உடனடியாக டா� ��்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பீட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடித்த படம் மெரினா. பாண்டிராஜ் இயக்கினார். கடந்த பிப்ரவரியில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கு எதிராக இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மெரினா படத்தில் என்னை தயாரிப்பாளராக போடுவதாக பாண்டிராஜ் கூறினார். இதற்காக என்னிடம் ரூ.50 லட்சம் வாங்கினார். ஆனால் படம் ரிலீசாகும் போது எனது பெயரை தயாரிப்பாளர் என்று போடவில்லை. இதுகுறித்து சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அங்கு இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக பாண்டிராஜ் ஒப்புக்கொண்டார். லாபத்திலும் பங்கு தருவதாக கூறினார்.

ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. எனவே மெரினா படத்தின் வரவு � ��ெலவு கணக்குகளை ஆராய அட்வகேட் கமிஷனை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சந்திர சேகரன் விசாரித்து வக்கீல் ரங்கனை அட்வகேட் கமிஷனாக நியமித்து இரு தரப்பிலும் வரவு செலவு கணக்கை விசாரித்து வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்

இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ் இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்
இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்

சென்னை, செப். 15-

தமிழ், மலையாள படங்களில் நடித்த பிருதிவிராஜ் இந்திக்கு போய் உள்ளார். அங்கு அய்யா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பிருதிவிராஜ் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார். இந்தியில் நடிப்பது குறித்து பிருதிவிராஜ் கூறியதாவது:-

அய்யா படத்தின் கதை மிகவும் பிடித்தது. எனவே நடிக்கிறேன். காமெடி, நடனம் என எல்லா விஷயங்களும் இருக்கும். இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ராணி முகர்ஜியின் தீவிர ரசிகன். அவர் நடித்த படங்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளது. அய்யா படத்தில் ராணி முகர்ஜி மராத்தி பெண்ணாக வருகிறார்.

சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது.

தமிழில் வரும் ரெசிடென்ட் ஈவில்

தமிழில் வரும் ரெசிடென்ட் ஈவில் தமிழில் வரும் ரெசிடென்ட் ஈவில்
தமிழில் வரும் ரெசிடென்ட் ஈவில்

சென்னை, செப். 15-

ஹாலிவுட் ஆக்ஷன் படமான ரெசிடென்ட் ஈவில் ஏற்கனவே பல பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது இதன் ஐந்தாம்பாகம் ரெசிடென்ட் ஈவில் ரீட்ரிபூஷன் என்ற பெயரில் வருகிறது. டபிள்யூ எஸ். அண்டர்சன் இயக்கியுள்ளார். மில்லாஜாவே, விச், சின்ன, கிளாரி, ஜோஹன்ட சர்ப் லிபிங்கிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

வீடியோ கேம்ஸ் சீரிஸ் அடிப்படையில் இ தன் கதை பின்னப்பட்டு உள்ளது. அம்பரல்லா கார்ப்பரேஷன் அமைப்பு பல மர்மங்களுடன் செயல்படுகிறது. அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆலிஸ் முயல்கிறாள். இதற்கு பதிலடியாக நடக்கும் அதிரடி ஆக்ஷன் சண்டைப்பிரியர்களுக்கு விருந்தாக உருவாக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ, நியூயார்க், லண்டன் நகரங்களில் கதை நிகழ்வதாக காட்டப்படுகிறது.

இப்படம் 3டி மற்றும் 2டியில் வெளிவருகிறது. � �ிரமாண்ட அரங்குகள் அமைத்து சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. வருகிற 28-ந்தேதி உலகம் முழுவதிலும் இப்படம் ரிலீசாகிறது இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழகத்தில் தமிழில் டப்பிங் செய்து படத்தை வெயிடுகின்றனர்.