Tuesday, November 6, 2012

சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்‌ரிஷா!

சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்‌ரிஷா!
Trisha-in-JFW-Magazine-New-Photoshoot-3

தந்தையின் திடீர் மரணம் காரணமாக ஹைதராபாத் சென்ற த்‌ரிஷா அந்த சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. என்றாலும் கடமை அழைக்கிறது.

சமர், என்றென்றும் புன்னகை, பூலோகம் என தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் சமர் சூப்பர் சீனியர். விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு த்‌ரிஷாவுக்காக காத்திருக்கிறது. அவர் வந்தால் மலேசியா சென்று பாடல் காட்சிகளை முடிக்கலாம் என்றிருக்கிறார் இயக்குனர் திரு.

அதேபோல் மற்ற இரு படங்களும்.

சீனியா‌ரிட்டி அதிகம் சமர் என்பதால் அதற்கே முக்கியத்துவம் தரயிருக்கிறார். அடுத்து பூலோகம் அதையடுத்து என்றென்றும் புன்னகை.

அனுஷ்காவை அதிரவைத்த ரசிகர்கள்!


anusha1

"ரெண்டு" படத்தில் மாதவன் ஜோடியாக அறிமுகமானவர் அனுஷ்கா. முதல் படம் சொல்லும் படி இல்லை என்ற போதிலும், அருந்ததி படம் அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்தது. எந்த வேடமாக இருந்தாலும், அனுஷ்காவால் நடிக்க முடியும். திறமையான நடிகை என்று நிரூபித்த பின்னரும் இயக்குனர்கள் பலரும் ஹீரோவுடன் டூயட் பாடுவதற்கு மட்டும் அனுஷ்காவை உபயோகப்படுத்துகின்றனர். எனினும் அனுஷ்காவுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு.

சமீப காலமாக அனுஷ்காவின் ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால், சமந்தா போன்றோர் பக்கம் பார்வையைத் திருப்பி இருக்கின்றனர். இதற்கு அனுஷ்கா நடித்து வெளியான தாண்டவம் படமும் ஒரு காரணம். தாண்டவம் படத்தில் அனுஷ்காவுக்கு சில காட்சிகளே ஒதுக்கப்பட்டிருந்தன. அனுஷ்காவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தாண்டவம் படம் திருப்தி அளிக்கவில்லை.

அனுஷ்காவின் ரசிகர்களில் சிலர், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை ட்விட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகின்றனர். இதனால் அதிர்ந்து போயிருக்கும் அனுஷ்கா, இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு வித்தியாசமான கெட்டப்களில் நடித்திருக்கிறேன். அது உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று பதிலளித்து வருகிறார்.