அஜித் - விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு தொடங்கிய
நாள் முதல் பெருத்த
எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
படத்திற்கு தலைப்பு வைக்காமல் 'தல 53' என்ற
தலைப்பில் முழுப் படப்பிடிப்பையும்
நடத்தி முடித்து விட்டார்கள்.
'வலை', 'வில்லனுக்கு வில்லன்', 'பறவை' என
படத்தின் தலைப்பு இது தான் என செய்திகளும்
வரிசை கட்டின. தற்போது படத்தின்
தலைப்பை முறையாக
அறிவித்து இருக்கிறார்கள்.
படத்திற்கு 'ஆரம்பம்' என
தலைப்பிட்டு இருக்கிறார்கள். அஜித்துடன்
நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என
ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,
விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார்.
படத்தினை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக
தயாரித்து இருக்கிறார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த படத்தின்
படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையிலும்,
துபாயிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜுன்
மாதம் முழுப் படப்பிடிப்பும் முடிவுற்றது.
கதைக்கு பொருத்தமான
பெயரை தேர்ந்தெடுப்பதில் அஜீத், இயக்குனர்
விஷ்ணுவர்தன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்
ஆகிய மூவரும் மும்முரமாக
ஈடுபட்டு வந்தார்கள்.
இணையத்திலும் படத்தின் தலைப்பு என்ன
என்பதில் அஜித்தின் ரசிகர்களும் ஆர்வம்
காட்டி வந்தார்கள். இப்படத்திற்கு ‘ஆரம்பம்’
என்று பெயர் சூட்டியிருப்பதாக
அறிவிப்பு வெளியானதும் TWITTER மற்றும்
FACEBOOK இணையங்களில் 'ஆரம்பம்'
ஆட்கொண்டது.
மும்பையில் நடந்த
ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக
கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது.
இப்படத்தில் அஜித்
ஒரு புலனாய்வு அதிகாரியாக
நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் செப்டம்பர் திரைக்கு வர
இருக்கிறது.
Tamil news Tamil movies Tamil Cinema Tamil movie Kollywood Tamil cinema Tamil actors Tamil actress Tamil movie news tamil newsKollywood Tamil movie