tag:blogger.com,1999:blog-82800638542176628582024-03-18T20:06:39.336-07:00Tamil CinemaTamil news Tamil movies Tamil Cinema Tamil movie Kollywood Tamil cinema Tamil actors Tamil actress Tamil movie news tamil newsKollywood Tamil movieUnknownnoreply@blogger.comBlogger1389125tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-11239807798246421042013-09-19T02:03:00.001-07:002013-09-19T02:03:32.592-07:00சிம்பு- ஹன்சிகா திருமணம் எப்போது? மோனா மோத்வானி simbu hansika marriage<p class="mobile-photo"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzJwNEzWiY4EffLeKvR4VY4MyWJZ5QGP1gEc3jISUthErYjILlKZLWHL-U2Q-BMW4AfexIp6cJSKcZp9acsAwxQGYsc5iIF4zA9ItLygJkmGR3_x2eXtggCGuVrvKjVUZkMVdDgGs9za1x/s1600/id52_simbu_hansika_new_001-712592.jpg"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzJwNEzWiY4EffLeKvR4VY4MyWJZ5QGP1gEc3jISUthErYjILlKZLWHL-U2Q-BMW4AfexIp6cJSKcZp9acsAwxQGYsc5iIF4zA9ItLygJkmGR3_x2eXtggCGuVrvKjVUZkMVdDgGs9za1x/s320/id52_simbu_hansika_new_001-712592.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5925257049349185266" /></a></p><p dir="ltr">சிம்பு- ஹன்சிகா திருமணம் எப்போது? மோனா மோத்வானி<br> by abtamil</p> <p dir="ltr">ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 13:42<br> ஹன்சிகாவுக்கு திருமணம் எப்பொழுது என்பது குறித்து அவரது தாய் மோனா மோத்வானி கூறியுள்ளார்.<br> கொலிவுட்டில் டாப் கியரில் சென்ற ஹன்சிகா, தான் சிம்புவை காதலிப்பதை அனைவருக்கும் தெரிவித்தார்.</p> <p dir="ltr">இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p> <p dir="ltr">இந்நிலையில் ஹன்சிகா- சிம்பு திருமணம் குறித்து அவரது தாய் மோனா மோத்வானி கூறுகையில், ஹன்சிகா கையில் 9 படங்கள் உள்ளன.</p> <p dir="ltr">அவர் தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார்.</p> <p dir="ltr">அடுத்த மாதம் சுந்தர். சி.யின் அரண்மனை பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் எனவே ஹன்சிகா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் மோனா.</p> <p dir="ltr">மேலும் துபாயில் நடந்த சிமா விருது விழாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஹன்சிகா ஸ்ரீதேவியின் கையால் பெற்றுள்ளார்.</p> <p dir="ltr">ஸ்ரீதேவியின் கையால் விருது வாங்கியதை நினைத்து நினைத்து பூரிக்கிறாராம் ஹன்சிகா.</p> <p dir="ltr">Show commentsOpen link</p> Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-24718787739283723672013-07-27T03:13:00.001-07:002013-07-27T03:13:24.493-07:00அஜித்தின் புதிய படம் 'ஆரம்பம்'<p>அஜித் - விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு தொடங்கிய<br>
நாள் முதல் பெருத்த<br>
எதிர்பார்ப்பு நிலவி வந்தது.<br>
படத்திற்கு தலைப்பு வைக்காமல் 'தல 53' என்ற<br>
தலைப்பில் முழுப் படப்பிடிப்பையும்<br>
நடத்தி முடித்து விட்டார்கள்.<br>
'வலை', 'வில்லனுக்கு வில்லன்', 'பறவை' என<br>
படத்தின் தலைப்பு இது தான் என செய்திகளும்<br>
வரிசை கட்டின. தற்போது படத்தின்<br>
தலைப்பை முறையாக<br>
அறிவித்து இருக்கிறார்கள்.<br>
படத்திற்கு 'ஆரம்பம்' என<br>
தலைப்பிட்டு இருக்கிறார்கள். அஜித்துடன்<br>
நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என<br>
ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.<br>
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,<br>
விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார்.<br>
படத்தினை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக<br>
தயாரித்து இருக்கிறார்.<br>
கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த படத்தின்<br>
படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையிலும்,<br>
துபாயிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜுன்<br>
மாதம் முழுப் படப்பிடிப்பும் முடிவுற்றது.<br>
கதைக்கு பொருத்தமான<br>
பெயரை தேர்ந்தெடுப்பதில் அஜீத், இயக்குனர்<br>
விஷ்ணுவர்தன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்<br>
ஆகிய மூவரும் மும்முரமாக<br>
ஈடுபட்டு வந்தார்கள்.<br>
இணையத்திலும் படத்தின் தலைப்பு என்ன<br>
என்பதில் அஜித்தின் ரசிகர்களும் ஆர்வம்<br>
காட்டி வந்தார்கள். இப்படத்திற்கு ‘ஆரம்பம்’<br>
என்று பெயர் சூட்டியிருப்பதாக<br>
அறிவிப்பு வெளியானதும் TWITTER மற்றும்<br>
FACEBOOK இணையங்களில் 'ஆரம்பம்'<br>
ஆட்கொண்டது.<br>
மும்பையில் நடந்த<br>
ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக<br>
கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது.<br>
இப்படத்தில் அஜித்<br>
ஒரு புலனாய்வு அதிகாரியாக<br>
நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<br>
இப்படம் செப்டம்பர் திரைக்கு வர<br>
இருக்கிறது.</p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-22826842130329876302013-07-25T22:25:00.000-07:002013-07-25T22:25:05.846-07:00Mother and Child (film) - Movie Tamil Review<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒன்றின் மீதான தீரா வெறுப்பு, அதன் மறுபக்கத்தை அல்லது அப்படி ஒன்று இருக்கக்கூடும் என்பதைக்கூட பார்க்க மறுத்து விடுகிறது.<br /><br />நம்மை
நன்குபுரிந்து கொண்டவர்கள், நம்மீதான அக்கறையில் சொல்லும்போது அதை
உதாசீனப் படுத்திவிடுகிறோம். ஆனால் அந்நபர் மீண்டும் மீண்டும், அதை நோக்கி
நம்மைச் செலுத்தும் போது, சரி அதையும்தான் பார்ப்போமே என நாம் முயலும்போது,
நிதர்சனம் நாம் கற்பனை செய்து கொண்டிருந்ததற்கு நேர்மாறாகவே இருக்கிறது;
பெரும்பாலும்.<br /><br />போலவே, வாழ்க்கையில் நமக்கு நேர்ந்த கசப்பனுவங்களின்
தொகுப்பாக ஒரு கண்ணாடி அணிந்து கொள்கிறோம். மீத வாழ்வை அதன் மூலமே பார்த்து
மேலும் மேலும் நம்மை ரணமாக்கிக் கொள்கிறோம். உன்மையில் நமக்காக ஒன்று
இன்னொருத்தருக்காக ஒன்று என்ற பேதம் ஏதுமில்லை. நடப்புக்களை அவரவர்
பார்வையிலேயே புரிந்து கொள்கிறோம். நமது கண்ணாடியை நீக்கி விட்டு நோக்கும்
போது உலகம் நமக்கு வேறு விதமாக நாம் நினைத்ததற்கு மாறாகத் தோன்றுகிறது.
அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழட்டி வெற்றுக்கண்ணால் நம்மைக் காணச்செய்ய
உற்ற துணை தேவைப்படுகிறது.<br /><br />குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கண்ணாடி
அணிவதோடு மட்டுமல்லாது தம்மைச் சுற்றி ஒரு மாயச்சுவர் எழுப்பிக்
கொள்கிறார்கள். அதைத் தாண்டி உள்ளே எவரையும் அனுமதிப்பதில்லை. தங்களுடை
முன்கூட்டிய மதிப்பீட்டின் வழியே பிறரையும், அது எவராகிலும்,
பார்க்கிறார்கள்.<br /><br />கரன் அப்படியான ஒரு பெண்மணி, 14 வயதில் கர்ப்பம்
தரித்து குழந்தையை அடாப்சனுக்குக் கொடுக்க நேரிடுகிறது. அதன்பிறகு அவரது
வாழ்க்கை நோயுற்றிருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொள்வதிலேயே போய்
விடுகிறது அவரது உலகில் அம்மாவைத் தவிர வேற்று மனிதர்களுக்கு இடமில்லை.
வீட்டு வேலைக்காரியிடம்கூட, இவ்வகை முதிர்கன்னிகளுக்கேயான சிடு சிடு கடு
கடு குணத்துடனேயே பழகுகிறார். குறிப்பாக வேலைக்காரியின் குழந்தையை
அவருக்குப் பிடிப்பதில்லை.<br /><br />அம்மாவும் இறந்துபோக தனிமரமாகிறார்.
கரனைக் குறித்து அவர் அம்மா, “கரன் பாவம் வேதனைப்படுகிறாள், அதற்கு
நான்தான் காரணம்” என்று சொன்னதைச் சொல்கிறாள் வேலைக்காரி. உடனே கரன், “அதை
அவர் என்னிடமல்லவா சொல்லி இருக்க வேண்டும்?” என்று வெடிக்கிறாள். அதற்கு
வேலைக்காரி, “அவருக்கு உன்னைக் கண்டு பயம் கரன்” என்கிறாள். கரன்
அதிர்ச்சியாகிறாள் பெற்ற அம்மாவே பயப்படும் அளவுக்கா நாம் நடந்து கொண்டோம்
என.<br /><br />கரன் வாழ்க்கையில் குறுக்கிடும் சக ஊழியர் பேக்கோ, கரனைக்
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார். முதலில் கரன் மிகப் பிடிவாதமாக
இருக்கிறார், தன் வட்டத்தவிட்டு வெளியே வர மறுக்கிறார்.<br />“I am a difficult person, I demand more from others, I know it is bad. But that’s how I am” எனத் தீர்மானமாகச் சொல்கிறார்.<br /><br />தாயாரின்
இறப்பும் தனிமையும் கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கோ பக்கம் நகர்த்துகிறது.
பழக்கம் வலுவாகி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கரனின் இறுக்கம்
கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது. கரனின் ஸ்டெப் மகள் கேட்கிறாள், “ஏன் இது
வரை உங்கள் மகள் எங்கே இருக்கிறாள் எனத் தேட முயற்சிக்கவில்லை, Find her
now... before time runs out. After that, only regret remains. And regret
is a killer.” அடுத்த நாள் முதல், மகளைத் தேடும் முயற்சியில்
இறங்குகிறாள்.<br /><br />கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் கரன் தற்போது
வேலைக்காரியுடன் நல்ல உறவை பேணுவதோடு மட்டுமல்லாது வேலைக்காரியின்
குழந்தையைச் சொந்த பேத்தி போலவே கவனித்து விளையாடி மகிழகிறாள்.<br /><br />கரனின்
மகளான எலிசபெத் 37 வயதான அழகிய, தனித்துவம் மிக்க, சுயசார்பான,
சுயமரியாதையைப் பேணுகிற, எதிலும் தீர்மானமான, முன்னுக்கு வரத் துடிக்கும்
வக்கீல். அவள் நேர்முகத் தேர்வில் தன்னைப் பற்றிச் சொல்வதில் இருந்து
அவளைப் பற்றிய தெளிவான பிம்பம் நமக்கு உருவாகிறது<br />I live alone. I've
never been married, and l have no plans to marry. I value my
independence above all things. , That way I don't have any expectations
to fulfill... other than my own, which are great enough.<br /><br />அவள்
புதிதாகச் சேரும் நிறுவனத்தின் அதிபர் பால் உடன் அவளுக்கு உறவு உண்டாகி
அதன் மூலம் கருவுண்டாகிறது. கருத்தரித்திருப்பது தெரிந்து தற்போதைய வேலையை
விட்டுவிட்டு மிகச்சுமாரான ஒரு வேலையை வேறு நிறுவனத்தில் தேடிக்
கொள்கிறாள்.<br /><br />“A person inside a person” என்ற வினோதத் தாய்மை நிலை
அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கிறது. அவள் வசிக்கும் அபார்ட்மெண்டில்
இருக்கும் பார்வையிழந்த சிறுமியும் தன் பங்கிற்கு எலிசபெத்தின் மனதை மாற்றி
அவளது அம்மாவைத் தேடச் செய்கிறாள்.<br /><br />லூசி, ஜோசப் தம்பதியினர்,
பேக்கரி நடத்துகிறவர்கள், குழந்தை அடாப்சனுக்கு முயற்சிக்கிறார்கள்.
லூசியால் குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதால் அடப்சனைத்
தேர்ந்தெடுக்கிறார்கள். ரே, 21 வயதுக் கல்லூரி மாணவி கர்ப்பம்
தரித்திருப்பவள் அடாப்சனுக்குச் சம்மதிக்கிறாள் சில நிபந்தனைகளோடு. லூசி
தம்பதியினரைக் கேள்விகளால் குடைந்தெடுக்கும் ரே, ”உங்கள் பழக்க
வழக்கங்கள், என் குழந்தை வளரப் போகும் சூழ்நிலை முதலியவற்றைப்
பார்த்தபின்பே என் குழந்தையை உங்களுக்குத் தத்துக் குடுப்பதா இல்லையா “ என
முடிவு செய்வேன் எனக் கறாராகச் சொல்கிறாள். எல்லாவற்றுக்கும் சம்மதித்து
குழந்தை பிறக்கக் காத்திருக்கின்றனர்.<br /><br />கரன், எலிசபெத்தைக்
கண்டடைந்தாளா? எலிசபெத்தின் குழந்தை என்ன ஆகிறது(திரும்பவும் அடாப்சனா?),
ரேயின் குழந்தை லூசி தம்பதிகளுக்குக் கிடைத்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.<br /><br />ஆனால்
கதையில் மையஓட்டமாக நான் கருதுவது Character Transformation என்பதைத்தான்.
ஆரம்பகாலக் கரனுக்கும் படத்தின் இறுதியில் இருக்கும் கரணுக்குமான குண
வேறுபாடுகள். எலிசபெத்தின் கறார்தனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தாய்மை
நிலையின் உன்னதத்தை உணர்வது. மிகமிகக் கறாரான மதிப்பீடுகளுடன் இருந்த
ரேயின் மாறுதல் இவை எல்லாம் படத்தின் முக்கிய அம்சங்கள்.<br /><br />தமிழிலும்
இதே போன்ற முயற்சிதான் அர்ஸ் அன்புக்கரசுவாக மாறும் அன்பே சிவம். அதை மிக
சப்டில் ஆகச் சொல்லி இருப்பார் கமல். நல்லதொரு முயற்சி என சுரேஷ் கண்ணன்
சொல்வார்.<br /><br />பாலின் மகள் எலிசபெத்தைப் பார்த்து ”Is that my father’s
child you are carrying?” என வெகு இயல்பாகக் கேட்பதிலாகட்டும், பால் “if
the child is mine, please come to me I will take care of both of you”
எனச் சொல்வதிலாகட்டும். ரேயின் கறார்தனத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி
ஜோசப்பும் லூசியும் பணிவதிலாகட்டும், கரனின் ஸ்டெப் மகள் அவளை மிக இயல்பாக
ஏற்றுக் கொள்வதிலாகட்டும், படத்தில் மோசமானவர் என எவருமே இல்லை. ஆனாலும்
சூழ்நிலை எப்படிப் புரட்டிப் போட்டு விளையாடுகிறது என்பதுதான் கதை.<br /><br />மிக நல்ல படம். கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒன்று.<br /><br />வழக்கம் போலவே படுக்கையறைக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் உண்டு படத்தில். குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-28769530667681376392013-07-23T03:01:00.003-07:002013-07-23T03:01:55.932-07:00மரியான் – விமர்சனம் - Mariyan Review<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தயாரிப்பு – ஆஸ்கர் பிலிம்ஸ் – வி. ரவிச்சந்திரன்<br />
இயக்கம் – பரத் பாலா<br />
இசை – ஏ.ஆர். ரகுமான்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBgcWZzgdPhkk3jcYU7Nm8UZ9xYAgbyP69uFSSzouMxToysBv_14csz95uAwVKf-VvB1k9hOCGSWxPYANvvRe6_l6TwZQD3rwyKmEA_PJSNwXTC5myQs4S6J5ectsAKrH0rko-_7r7BIET/s1600/mariyaan_00019.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBgcWZzgdPhkk3jcYU7Nm8UZ9xYAgbyP69uFSSzouMxToysBv_14csz95uAwVKf-VvB1k9hOCGSWxPYANvvRe6_l6TwZQD3rwyKmEA_PJSNwXTC5myQs4S6J5ectsAKrH0rko-_7r7BIET/s320/mariyaan_00019.jpg" width="320" /></a></div>
ஒளிப்பதிவு – மார்க் கோனின்க்ஸ்<br />
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்<br />
பாடல்கள் – வாலி, ஏ.ஆர். ரகுமான், தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, பிளாஸி, பிரையன் கப்வே, சோஃபியா அஷ்ரப், மோகன் ராஜ்.<br />
திரைக்கதை – பரத் பாலா, ஸ்ரீராம் ரஞ்சன்<br />
வசனம் – ஜோ டி க்ரூஸ்<br />
சண்டைப் பயிற்சி – திலீப்குமார் சுப்பராயன், ஆக்ஷன் பிரகாஷ்<br />
நடனம் – பிருந்தா, நோபுள், காயத்ரி ரகுராம், ராதிகா பழனியப்பன்<br />
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா<br />
நடிப்பு – தனுஷ்,
பார்வதி, அப்புக்குட்டி, ஜெகன் புருஷோத்தம், சலீம் குமார், விநாயகன் டிகே,
டி. இம்மானுவேல், உமா ரியாஸ்கான், அங்குர் விகால் , அறிமுகம் –
கிறிஸ்டோபர் மின்னி, டக்பே ட்வே, பார்ரி மைது மற்றும் பலர்.<br />
வெளியான தேதி – 19 ஜுலை 2013<br />
<a name='more'></a><br />
“நீர்ப்பறவை”,“கடல்” படங்களைத்
தொடர்ந்து வந்திருக்கும் கடல் சார்ந்த மனிதர்களைப் பற்றிய படம். ஒரே
சமயத்தில் எப்படி ஒரே மாதிரியானை கதைகளை யோசித்தார்களோ தெரியவில்லை.<br />
இடைவேளை வரை ஹீரோ, ஹீரோயினின்
கதாபாத்திரப் படைப்பு அந்த படங்களில் உள்ளதைப் போலவே இருந்து ஆச்சரியப்பட
வைக்கிறது. இந்த படத்திலும் ஹீரோ எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.
ஹீரோயின் மதப் பணியில் ஈடுபாடு கொண்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே
காதல்…நல்ல வேளை இடைவேளைக்குப் பின், கதை வேறு பாதையில் நகர்ந்து
விடுகிறது.<br />
நீரோடி என்ற மீனவ கிராமத்தில் கடலுக்கே
ராசாவாக இருப்பவர் தனுஷ். இவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால், கடலே
காலியாகிவிடும் அளவிற்கு மீனைப் பிடிப்பவர். அதே ஊரில், தனுஷ் மீது
வெறித்தனமான (!) காதலுடன் சுற்றி வருபவர் பார்வதி. இவரின் அழகில் மயங்கி
திருமணம் செய்து கொள்ளத் துடிப்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும்
வினாயகன்.<br />
இவர் ஒரு முறை பெண் கேட்டு பார்வதி
வீட்டுக்குச் செல்ல, தனுஷ் அவரிடம் சண்டைக்குப் போக, வினாயகன், பார்வதி
அப்பா பட்ட கடனை அடைக்கச் சொல்ல, அதை தான் அடைப்பதாகச் சொல்லி, சூடான்
நாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, கடனை அடைத்து விட்டு, சூடான்
சென்று விடுகிறார் தனுஷ்.<br />
இதெல்லாம் இரண்டு வருடத்து பிளாஷ்பேக்.
ஊருக்கு கிளம்ப ஒரு வாரம் இருக்கும் நிலையில் அந்த நாட்டு தீவிரவாதிகள்
(தங்கள் மண்ணைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் தீவிரவாதிகளா ?) தனுஷை கடத்தி
விடுகிறார்கள். அதிலிருந்து மரணமே இல்லாதவன் என்ற அர்த்தம் கொண்ட ‘மரியான்’
எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.<br />
தனுஷ்
இதுவரை ஏற்று நடிக்காத ஒரு மீனவ கதாபாத்திரம். உடலால்தான் இளைத்தவர்,
நடிப்பால் சளைத்தவர் இல்லை என மீண்டும் ஒரு தேசிய விருதுக்கு அச்சாரம்
போடுகிறார் தனுஷ். பார்வதியை கடற்கரையில் வைத்து அடிக்க
முயற்சிப்பதாகட்டும், பின்னர் அவர் மீது காதல் வந்து தனிமையில் காதலை
ருசிப்பதாகட்டும் நடிப்பில் எங்கோ போய்விடுகிறார்.<br />
அடிக்கடி பீடி குடிப்பது மட்டும் ஏனோ ?
”ஒரு பீடியே இன்னொரு பீடியை குடிக்கிறதே” என விவேக் பாணியில் கவிதைதான்
தோன்றுகிறது. மாமனார் மாதிரி நீங்களும் இனி இம்மாதிரி காட்சிகளில் நடிக்க
மாட்டேன் என அறிக்கை விடலாமே …<br />
‘பூ’ படத்திலேயே மனம் கவர்ந்தவர்
இடையில் காணாமல் போய் ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் மீண்டும் வந்து, இந்த
‘மரியான்’ படத்தில் மீண்டும் ஒரு முறை மனம் கவர்ந்து விட்டார். சரிதா,
ஷோபா, ரேவதி இப்படி அனைவர் கலந்த கலவையாக இருக்கிறார் நடிப்பில். அவர்
முகபாவம் நடிப்பதற்கு முன்னாலே அந்த ‘இரண்டு கண்கள்’ நடித்து விடுகின்றன. (
ஐ ப்ரோ மட்டும் பார்லர்ல போய் ட்ரிம் பண்ணாம இருந்திருக்கலாம்).<br />
ஆனாலும், டீன் ஏஜ் பருவத்தை தாண்டிய
பெண்ணாக தோற்றமளிப்பவரை கிளாமருக்காக பாவாடை, சட்டை அணிய விட்டிருப்பதை
தவிர்த்திருக்கலாம். தமிழ் சினிமாவையும் ஞாபகம் வச்சிக்குங்க பார்வதி…<br />
அப்புக்குட்டி நண்பனின் காதலுக்காக
உதவி செய்து, “எந்த பாவியாலேயோ” சுடப்பட்டு இறந்து விடுகிறார். (உண்மையை
சொல்ல என்ன தயக்கம் இயக்குனரே, தமிழன் மரணம் உங்களுக்கு சென்டிமென்ட்
காட்சிக்கு மட்டுமே).<br />
தனுஷ் அம்மாவாக உமா ரியாஸ்கான்,
நடிப்பில் காந்திமதிதான் எட்டிப் பார்க்கிறார். நீங்கள் உங்க அம்மா கமலா
காமேஷ் படங்களைப் பார்த்தாலே போதுமே, யதார்த்தமா நடிச்சிடலாமே.<br />
தனுஷுடன் சேர்ந்து தேசிய விருது பெற்ற
மலையாள நடிகர் சலீம் குமார், பார்வதியின் அப்பாவாக
வீணடிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் அவருக்கு வைக்கப்பட்டுள்ள அந்த
‘விக்’கிற்கு ஒப்பனையாளர்தான் பதில் சொல்ல வேண்டும்.<br />
‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின்
வலது கரமாக, தாங்கி தாங்கி நடந்து, நடிப்பில் நிமிர்ந்த டி.கே. வினாயகன்,
பார்வதி மீது ஆசைப்படும் சிறு வில்லனாக நடித்திருக்கிறார்.<br />
ஜெகன், இமான் அண்ணாச்சி இவர்களும்
படத்தில் இருக்கிறார்கள். சூடான் போராட்டக்காரர்கள் தீபாவளி துப்பாக்கி
போல் சரமாரியாக சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் பேசும் போது சப்
டைட்டிலாவது போட்டிருக்கலாம்.<br />
ஏ.ஆர். ரகுமான்தான் படத்தின் உயிர் மூச்சு. பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி மரியானை மறக்க விடாமல் செய்திருக்கிறார்.<br />
கவிஞர் வாலி எழுதிய “நேற்று அவள்…”
பாடல் இந்த ஆண்டின் சூப்பர் மெலடி. கபிலன் எழுதிய “இன்னும் கொஞ்ச நேரம்..”
பாடலும் இனிமை. யுவன் பாடியிருக்கும் ‘கடல் ராசா…” கலக்கலோ கலக்கல்.
ரகுமான் பாடியுள்ள ‘நெஞ்சே எழு…” சரியான எழுச்சிப் பாடல், ஆனால் இந்த காதல்
படத்துக்கு தேவையில்லாத ஒன்று. வேறு ஒரு புரட்சிகரமான படத்திற்கு
பயன்பட்டிருக்கலாம்.<br />
ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸ் கடல், பாலைவனம் என படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.<br />
இடைவேளைக்குப் பின் படம் தள்ளாடுகிறது.
எப்போது தனுஷ் தப்பிப்பார் என்று யோசிக்க வைத்து விடுகிறது. சூடான்
பாலைவனத்தை சுற்றி, சுற்றிக் காண்பித்து கொஞ்சம் போரடித்து விடுகிறார்கள்.<br />
ஏ.ஆர். ரகுமான், தனுஷ், பார்வதி இவர்களுக்காக படத்தைப் பார்க்கலாம்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-55971330140883752152013-07-20T10:24:00.001-07:002013-07-20T10:24:03.881-07:00சிமபு லவ் ஹன்சிகா simbu love hanshika<p>நானும் சிம்புவும் லவ்<br>
பண்றது உண்மைதான் : அட..,<br>
சொல்றது ஹன்ஷிகாவே தான்…?!<br>
இருக்கு, ஆனா இல்ல…<br>
என்று சொல்லாமல் இல்ல,<br>
இது கன்பார்ம் தான்<br>
என்று ஓப்பனாக சொல்லிவிட்டார்<br>
ஹன்ஷிகா மோத்வானி.<br>
முந்தாநாள் வரைக்கும் நானும்<br>
சிம்புவும் நல்ல ப்ரெண்ட்ஸ்..,<br>
எங்களுக்குள் காதலும் இல்லை,<br>
கத்தரிக்காயும் இல்ல…<br>
என்று ஆந்திரா, தமிழ்நாடு என<br>
இரண்டு ஏரியாக்களிலும்<br>
மீடியாக்களிடம்<br>
மேடை கட்டி முழங்கிய<br>
ஹன்ஷிகா தற்போது ட்விட்டரில்<br>
தன் காதல் ரகசியத்தின்<br>
உண்மையை போட்டு உடைத்திருக்க<br>
ிறார்.<br>
இதுகூறித்து ஹன்சிகா தனது ட்வி<br>
ட்டர் அக்கவுண்ட்டில்<br>
கூறியிருப்பதாவது :<br>
“எனது வாழ்க்கை குறித்து பல்வேற<br>
ு வதந்திகள் வெளிவந்த வண்ணம்<br>
உள்ளன. இப்போது சொல்கிறேன்.<br>
நான்<br>
சிம்புவை பார்ப்பது உண்மைதான்.<br>
ஆனால் எனது சொந்த<br>
வாழ்க்கை குறித்து இப்போதைக்கு<br>
எதுவும் கூற முடியாது”<br>
என்று தெரிவித்து இருக்கிறார்.<br>
பதிலுக்கு சிம்புவும்<br>
தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் :<br>
“மீடியாக்கள் எனது சொந்த<br>
வாழ்க்கை குறித்து தவறான<br>
தகவல்கள் வெளியிடுவதை நிறுத்த<br>
வேண்டும். நான் ஹன்சிகாவுடன்<br>
பழகிக் கொண்டு தான் இருக்கிறேன்.<br>
இப்போது கூட அவருடன் தான்<br>
நான் இருக்கிறேன், ஹன்சிகா நல்ல<br>
பொண்ணு. என் கல்யாணம்<br>
குறித்து எனது குடும்பம் தான்<br>
முடிவு செய்ய வேண்டும்.”<br>
என்று தெரிவித்திருக்கிறார்.<br>
ஒரு விஷயத்துல பலபேர்<br>
குழப்புவாங்க, ஆனா நீங்க<br>
ரெண்டு பேரும் இந்த விஷயத்துல<br>
ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க…<br>
போலிருக்கு!</p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-79617391992211471022013-07-16T00:48:00.005-07:002013-07-16T00:48:56.429-07:00சிங்கம் – 2 சக்சஸ் பார்ட்டி விடிய விடிய ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அனுஷ்கா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-e1LHQ0OaS8__8DZJvNgTH8EffpEXO9-Z9YGFtb65xKmnVCFCQL2saCEjfrSKH5XYORb2m8sCvzx_H3y8N49wWIsLFbv6lX3Bs_fY3zllVWiTzJ0rnV9vjpDfh1FU6V7ACsqtZeadrl6-/s1600/Arya-Anushka-Shetty.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="186" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-e1LHQ0OaS8__8DZJvNgTH8EffpEXO9-Z9YGFtb65xKmnVCFCQL2saCEjfrSKH5XYORb2m8sCvzx_H3y8N49wWIsLFbv6lX3Bs_fY3zllVWiTzJ0rnV9vjpDfh1FU6V7ACsqtZeadrl6-/s320/Arya-Anushka-Shetty.jpg" width="320" /></a></div>
<h1 class="entry-title ">
<span style="font-size: small;">சிங்கம் – 2 சக்சஸ் பார்ட்டி விடிய விடிய ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அனுஷ்கா!</span></h1>
<strong>இ</strong>ந்தமுறை ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற
இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சூர்யாவுக்கு சமீபத்தில் ரிலீஸான
‘சிங்கம்-2 படத்தின் மெகா ஹிட் அவரை ரொம்பவே சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.<br />
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு
பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா. சென்னையில் உள்ள ஒரு
ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் மிகவும் ரகசியமாக நடந்த இந்த பார்ட்டியில் பிரபல
புரொடியூசர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.<br />
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், தனுஷ், பிரபு, ஜெயம்ரவி,
ஆர்யா, ஜீவா, கெளதம்மேனன், லிங்குசாமி, ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய
பிரபலங்களும் கூட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்களாம்.<br />
வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வாக்கில் தொடங்கிய சிங்கம் -2 பார்ட்டி, சனிக்கிழமை காலை விடியும் வரை நீண்டதாம்.<br />
படத்தின் பப்ளிசிட்டிக்கு கூட கலந்து கொள்ள நேரம் இல்லாத அனுஷ்கா இந்த
பார்ட்டியில் கலந்து கொள்வதற்காகவே ஹைதராபாத்தில் இருந்து ஸ்பெஷலாக பறந்து
வந்தாராம்.<br />
வந்தவர் வந்த வேகத்திலேயே பார்ட்டியில் தள்ளாட ஆரம்பித்து விட்டாராம்.
பார்ட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அனுஷ்காவுக்கு கம்பெனி
கொடுத்தவர் நடிகர் ஆர்யா தானாம். ஆர்யாவுடன் சேர்ந்து செமத்தியான பட்டையைக்
கிளப்பும் ஆட்டம் போட்ட அனுஷ்கா விடியும் வரை ஆர்யாவின் கையை விடவே
இல்லையாம்.<br />
குதிரை போல இருக்கும் அனுஷ்காவின் ஆட்டத்தை பார்த்து பார்ட்டிக்கு
வந்திருந்த எல்லோருமே அசந்து விட்டார்களாம். என்பது தான் சிங்கம் -2
பார்ட்டியின் ஹைலைட்.
<br />
<h1 class="entry-title ">
</h1>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-78487984881133835522013-07-16T00:44:00.003-07:002013-07-16T00:44:36.869-07:00தல-தளபதி யில் யாரை பிடிக்கும்? சூர்யா அசத்தல் பதில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அண்மையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2
திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகராமாக
ஓடிக்கொண்டிருக்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPVobfCuxQWrARqDRlnW2z-m04mq53Z9cqNpOpUEefzlgcqz01o_PZAwVHveDJocOVt9rT2ECoyEOzgBhDfutMC7yGXP9GTKJCEqtTD9mh_wZ3YZgi_xfk6qzNFVxC7_aOEldDy6RM8wdj/s1600/vaaranam-aayiram-is-surya-.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPVobfCuxQWrARqDRlnW2z-m04mq53Z9cqNpOpUEefzlgcqz01o_PZAwVHveDJocOVt9rT2ECoyEOzgBhDfutMC7yGXP9GTKJCEqtTD9mh_wZ3YZgi_xfk6qzNFVxC7_aOEldDy6RM8wdj/s320/vaaranam-aayiram-is-surya-.jpg" width="320" /></a></div>
இதில் அனுஷ்காவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். சிங்கம் கதையின்
தொடர்ச்சியே 'சிங்கம் 2 படத்தின் கதை. சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக
வந்த சிங்கம் 2 திரைப்படமும் நல்ல வரவேற்ப்பு பெற்றிருப்பதால் சிங்கம் 3
உருவாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.<br />
இந்நிலையில் முன்னணி டிவி சேனல் ஒன்று, மாணவிகளிடம் சூர்யா
கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. MOP வைஷ்ணவா
கல்லூரியில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சூர்யாவுடன் ஹரியும்
கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தனக்கே உரிய
பாணியில் சூர்யா பதிலளித்தார்.<br />
<a name='more'></a><br />
இந்தியில் வெளியான 'தோஸ்தானா' என்ற படத்தை தமிழில் எடுத்தால், யாருடன்
சேர்ந்து நடிப்பீர்கள் என்று சூர்யாவிடம் கேட்டபோது, மாதவன் என்று கூறி
அனைவரையும் அதிர வைத்தார். இதேபோல் மற்றொரு கேள்வியில் 'தல', 'தளபதி'
இருவரில் யாரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டதற்கு, 'தல-தளபதி'
என்று கூறி நழுவி விட்டார். சிங்கம் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன்
இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், லிங்குசாமி இயக்கம்
படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-68813099122855998722013-07-15T05:27:00.003-07:002013-07-15T05:27:40.660-07:00விஜய்யை புகழ்ந்த தலைவா படத்தயாரிப்பாளர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விஜய் சினிமாத்தனமில்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர், என்று புகழ்ந்துள்ளார் தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். <br /><br />விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். <br /><br />இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 9-ம் தேதி ‘தலைவா' படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார். அவர் கூறுகையில், "தலைவா' படம் சிறப்பாக வந்துள்ளது. காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என மெகா பொழுதுபோக்குப் படமாக தலைவா இருக்கும். <br /><br />மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார். <br /><br />ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-53952899064964017402013-07-15T00:23:00.001-07:002013-07-15T00:23:07.450-07:00கவர்ச்சி டான்ஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மூணு வேளையும் மிளகாயை வச்சே பல்
தேய்க்கிற ஊரு போலிருக்கு கர்நாடகா! எதற்கெடுத்தாலும் பிரச்சனை, எல்லா
மேட்டரையுமே சண்டை என்கிற கோணத்தில் பார்க்கும் இவர்களிடம் பிரச்சனைகள்
தேடி தேடி போய் சிக்கிக் கொள்வதுதான் ஆச்சர்யம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDdTm1qRyWHtnxMjHIE9aajDAUKs0MYH4C_LZg5fOEiDxaAowap9WSEtiukl25w-it7Q17Z50qL9Pmt2tmgDWy1gIfTDtmKPgtDJKP8hFrNWN0_5nmoGyokpL3ybaN_Dqk8Vobs5eobI4F/s1600/26122005-THN13image1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDdTm1qRyWHtnxMjHIE9aajDAUKs0MYH4C_LZg5fOEiDxaAowap9WSEtiukl25w-it7Q17Z50qL9Pmt2tmgDWy1gIfTDtmKPgtDJKP8hFrNWN0_5nmoGyokpL3ybaN_Dqk8Vobs5eobI4F/s320/26122005-THN13image1.jpg" width="226" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்ம ஊரு கேமிராமேன் பாலபரணி இப்போது ஒரு
கன்னட படத்திற்கு கேமிராமேனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். படத்தின்
பெயர் 'பியார்கே அக்படைதே' அப்படின்னா காதல் வந்துருச்சு என்று அர்த்தமாம்.
காதல் வந்ததோ இல்லையோ, ஷுட்டிங் ஸ்பாட்டில் சண்டைதான் வந்ததாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரபல கவர்ச்சி ஆட்டக்காரி ரக்சனா
மவுரியாவின் கவர்ச்சி பாடல் ஒன்றை படமாக்க மைசூருக்கு போயிருந்தார்களாம்.
அரை ஸ்கர்ட், ஆடா தொடையழகு என்று மொத்த கூட்டத்தையும் கிறங்கடித்த ரக்சனா,
கரெக்டாக ஸ்டெப் வைக்க போகும் நேரம் பார்த்து சுமார் 100 பேர் கொண்ட
கும்பல் அங்கு வந்ததாம். </div>
<a name='more'></a>ஷுட்டிங்கை நிறுத்து. கண்ணியமான எங்க மைசூர்
மஹாராஜா வாழ்ந்த ஊரில் இப்படி அரைகுறை ஆட்டம் போடறதை நாங்க பொறுத்துக்க
மாட்டோம். இடத்தை காலி பண்ணுங்க என்று கோஷம் போட, கேரவேனுக்குள் ஓடி
ஒளிந்து கொண்டாராம் ரக்சனா மவுரியா.<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கப்புறம் எப்படியோ பேசி, அரை
ஸ்கர்ட்டுக்கு பதிலாக பேண்ட் சட்டை போட்டு படமாக்கினார்களாம். நல்லவேளை....
கேமிராமேன் தமிழன்னு தெரியல. தெரிஞ்சிருந்தா கலவரத்தை கண்ட்ரோல் பண்ண
கண்ணீர் புகை தேவைப்பட்டிருக்கும்! </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-9150948438220568772013-06-21T22:38:00.002-07:002013-06-21T22:38:57.931-07:00Payroll and actresses in the movie, Anushka first place , Nayantara second place<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdFyXvro-QNC7xrmx7T_lSiCxoGpg7HNyXbiG2IeO2yBapAMzoNwBbhM1FFUkQ2wV35ayUS81HMb0GbN8kt9AQSd_2n-u16eCQys17IawnyD1JDblNQUWAbUBxoof6vKs5_-f-9IGXujWy/s1600/73aa247d-0078-49a3-9e13-30bfb0b5bffc_S_secvpf.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdFyXvro-QNC7xrmx7T_lSiCxoGpg7HNyXbiG2IeO2yBapAMzoNwBbhM1FFUkQ2wV35ayUS81HMb0GbN8kt9AQSd_2n-u16eCQys17IawnyD1JDblNQUWAbUBxoof6vKs5_-f-9IGXujWy/s1600/73aa247d-0078-49a3-9e13-30bfb0b5bffc_S_secvpf.jpg" /></a><span class="" id="result_box" lang="en"><span title="நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.">Nayantara, Anushka salary increased from Rs.2 crore. </span><span title="இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை.">Any Tamil, Telugu actress and such amount is not acquired. </span><span title="இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.">Both in the market has peaked. </span><span title="எனவே சம்பளத்தை வரலாறு காணாத அளவு ஏற்றி உள்ளனர்.">The carrying amount of salary history.<br /></span><span title="நயன்தாரா தெலுங்கில் நடிக்கும் 'அனாமிகா' படத்துக்காக இந்த சம்பளம் வழங்கப்படுகிறது.">Hot Telugu film 'Anamika' salary provided for the film. </span><span title="இப்படம் இந்தியில் ஹிட்டான 'கஹானி' என்ற படத்தின் ரீமேக் ஆகும்.">In the Hindi hit film 'Kahani' is a remake of the film. </span><span title="இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார்.">Pregnant readying starring role was in Hindi. </span><span title="அதே கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார்.">Nayan plays the same role. </span><span title="கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே ரூ.2 கோடியை அள்ளி கொடுத்துள்ளனர்.">Given Rs 2 crore to play my pregnancy.<br /></span><span title="தமிழில் நயன்தாரா அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் ஆர்யாவுடன் 'ராஜாராணி' படத்திலும் மற்றும் உதயநிதியுடன் 'இது கதிர்வேலன் காதலி' படத்திலும் நடிக்கிறார்.">Patamonrilum
untitled film with Arya and Nayantara in the Tamil film 'rajarani' with
film and Udayanidhi 'katirvelan love it' plays on film. </span><span title="இப்படங்களுக்கு இரண்டு கோடிக்கு குறைவாகவே சம்பளம் பேசி உள்ளார்.">These talking salary is less than two million. </span><span title="தெலுங்கில் சம்பளம் ரூ.2 கோடியானதால் அடுத்து ஒப்பந்தமாகும் புதுப் படங்களுக்கு ரூ.2 கோடி கேட்க முடிவு செய்துள்ளாராம்.">The next salary negotiation of new films in Telugu Rs.2 kotiyanat has decided to ask for the Rs 2 crore.<br /></span><span title="இதுபோல் அனுஷ்கா 'ருத்ரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடிக்க ரூ.2 கோடி பெற்றுள்ளார்.">Anushka like 'rutramatevi' has a historical role Rs.2 crore. </span><span title="இதில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார்.">Anushka is the role of the Queen. </span><span title="இதற்காக வாள் சண்டையும் கற்றார்.">He learned sword fighting.<br /></span><span title="தமிழ், தெலுங்கு ரசிகர்கள் இரு நடிகைகளையும் கனவு கன்னியாக வைத்து கொண்டாடுவதை சம்பள உயர்வு வெளிப்படுத்தி உள்ளது என்கின்றனர்.">Tamil, Telugu fans celebrating a pay rise has demonstrated that the two actresses would dream girl.</span></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-35541357572764254362013-06-16T02:48:00.001-07:002013-06-16T02:48:44.915-07:00கமல் படத்தில் காஜால்அகர்வால்<p>லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டாராம்.காஜல் அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.முன்பெல்லாம் எப்பொழுதாவது கோலிவுட் பக்கம் வந்து தலையைக் காண்பித்துவிட்டுப் போன அவர் தற்போது இங்கும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்த துப்பாக்கி படம் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு தமிழ் படங்களில் அதுவும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வருகிறது.காஜல் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஹாசன் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளனர்.காஜல் கை நிறைய படங்கள் இருப்பதால் கமல் படத்தில் நடிக்க டேட்ஸ் இல்லையாம். அதனால் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார் காஜல். இதையடுத்து வேறு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.</p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-62383059132153463932013-05-26T21:55:00.001-07:002013-05-26T21:55:10.586-07:00டி.எம். சௌந்தர்ராஜன் பற்றி 100 தகவல்கள்<p>டி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள் பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார். இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர்சென்னையில் காலமானார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி பிரகாஷ் அவர்களின் பதிவிலிருந்து... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா! </p>
<p>1. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது</p>
<p> 2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார். </p>
<p>3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார். </p>
<p>4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.</p>
<p> 5. 1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல். </p>
<p>6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று! </p>
<p>7. டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ். </p>
<p>8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது. </p>
<p>9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். </p>
<p>10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.</p>
<p> 11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார். </p>
<p>12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.</p>
<p> 13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)<br>
14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!<br></p>
<p> 15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார். </p>
<p>16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...' </p>
<p>17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'. </p>
<p>18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார். </p>
<p>19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும்500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p> 20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். </p>
<p>21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும</p>
<p>். 22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ். <br>
23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'.</p>
<p> 24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. </p>
<p>25. 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பியது இலங்கை வானொலி. டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து. டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர். </p>
<p>26. மலையாளத் திரைப்படமான 'ராக சங்கமம்' படத்தில், கிஷோர் இசையில், 'படைச்சோன்தன்னை ரட்சிக்கணும்...' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ</p>
<p>். 27. சமையல் செய்வதில் நிபுணர் டி.எம்.எஸ். முன்னெல்லாம் ஓய்வு கிடைத்தால், இவரது பொழுதுபோக்கே வீட்டில் சமையல் செய்வதில் ஈடுபடுவதுதான். டி.எம்.எஸ். ரசம் வைத்தால், வீடு முழுக்க அந்த வாசனை கமகமக்கும். </p>
<p>28. பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள், செயின்களை அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர் டி.எம்.எஸ். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்கமாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு" என்பார். வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிடுவார்.</p>
<p> 29. சாண்டோ சின்னப்பா தேவருக்கு டி.எம்.எஸ். மீது அளவற்ற அன்பு உண்டு. எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்துள்ளவர் தேவர். 'நல்ல நேரம்' படத்தின்போது, டி.எம்.எஸ். மீது அப்போது எழுந்த ஒரு கோபத்தில், அவரைத் தவிர வேறு யாரையாவது பாட வைக்கும்படி எம்.ஜி.ஆர். சொல்ல, உறுதியாக மறுத்துவிட்டார் தேவர். "அப்படின்னா இந்தப் படத்தை நான் தயாரிக்கவே இல்லே! கேன்ஸல்!" என்று அவர் தீர்மானமாகச் சொன்னதைக் கண்டு, எம்.ஜி.ஆரே வியந்துபோனார். தன் பிடிவாதத்தைக் கைவிட்டார். 'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட்! </p>
<p>30. ‘ஜெயபேரி’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவுக்கு ஒரு பாடல். ‘தெய்வம் நீ வேணா... தர்மம் நீ வேணா...’ என்கிற கிளைமாக்ஸ் பாடலான இதை ஹை-பிட்ச்சில் பாடவேண்டும். பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவைக் (இவர் நடிகர் நாகேஸ்வரராவ் அல்ல!) கையெடுத்துக் கும்பிட்டு, “இது நம்மால ஆகாதுங்க. டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டுப் பாட வைங்க. அற்புதமா பாடித் தருவார்” என்று சிபாரிசு செய்ய, தமிழைத் தவிர வேறு மொழிகளில் பாட அதிகம் விருப்பம் காட்டாத டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி அழைத்துப் போய்ப் பாட வைத்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என யாருக்கும் பாடாத ஒரு புதுக் குரலில், நடிகர் நாகேஸ்வரராவுக்குக் கச்சிதமாகப் பாடித் தந்து அசத்திவிட்டார் டி.எம்.எஸ். </p>
<p>31. சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. பாடல்... பாடல்... பாடல்... இதைத் தவிர, வேறு பொழுதுபோக்கோ, அரட்டையோ இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் டி.எம்.எஸ்.</p>
<p> 32. கவிஞர் வாலியைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ்தான். அது மட்டுமல்ல, அவரை எம்.ஜி.ஆர். உள்பட பல திரையுலகப் பிரபலங்களிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து, சான்ஸ் வாங்கித் தந்தவர் டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்றுவரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியுடன் கூறுவார் வாலி. </p>
<p>33. ஜெயலலிதாவுடன் இணைந்து, 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...', 'ஓ... மேரி தில்ரூபா...', 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ்' என மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.</p>
<p> 34. 'மரியாதைராமன் கதா' என்னும் தெலுங்குப் படத்தில் டி.எம்.எஸ். பாடியுள்ளார். இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானார். </p>
<p>35. சிவாஜிகணேசனுக்கு பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனைத்தான் தனக்குப் பின்னணி பாட வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், சி.எஸ்.ஜெயராமன் தனக்குக் கொடுக்கும் சம்பளம் போதாது என்று பாட மறுத்துவிட்டதால், அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. அவரும் பாடிக்கொடுக்க, அத்தனைப் பாடல்களும் பயங்கர ஹிட்! சிவாஜிகணேசன் மகிழ்ந்துபோய், அன்றிலிருந்து தனக்கு டி.எம்.எஸ்ஸே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் 'தூக்குத் தூக்கி'. </p>
<p>36. 'தூக்குத் தூக்கி' படத்துக்கு முன்பே சிவாஜிக்கு 'கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு...' என்ற பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் இடம்பெற்ற பாடல் அது. அதைக் கேட்டுவிட்டுத்தான் 'மலைக்கள்ளன்' படத்தில் தனக்கு டி.எம்.எஸ்ஸைப் பின்னணி பாட வைக்கும்படி சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். </p>
<p>37. பல காதல் டூயட்டுகளைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கும் காதல் தோல்வி உண்டு. தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், வறுமைக் கோட்டில் இருந்த டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக்கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ். </p>
<p>38. பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல்... 'குங்குமப் பொட்டின் மங்கலம்'. அதைப் பாடியவர் டி.எம்.எஸ். </p>
<p>39. பாடலை வாங்கிப் படித்து, இசையமைப்பாளர் சொன்ன ராகத்தில் பாடிக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று நினைக்காமல், அதை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான தனது யோசனைகளையும் சொல்வது டி.எம்.எஸ்ஸின் வழக்கம். இப்படித்தான், 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் டி.எம்.எஸ். அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர். </p>
<p>40. மு.க.முத்து நடித்த பட விழா ஒன்றில், "மந்திரிகுமாரிக்குப் பாடிய டி.எம்.எஸ். இந்த மந்திரி குமாரனுக்கும் பாடியிருக்கிறார்" என்று சிலேடையாகப் புகழ்ந்தார் முதல்வர் மு.கருணாநிதி. </p>
<p>41. 'நாடோ டி மன்னன்' படத்தில் இடம்பெறும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடலுக்குப் பரம ரசிகர் இந்திப் பாடகர் முகம்மது ரஃபி. அந்தப் பாடலில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்கிற வரியில் 'ஓ...' என்று ராகம் இழுப்பார் டி.எம்.எஸ். இந்தப் படம் இந்தியில் தயாரானபோது, இந்தப் பாடல் வரியைக் கேட்ட முகம்மது ரஃபி, "ஹம் மர் ஜாயேங்கே" (இதைப் பாடினா என் உயிர் போயிடும்" என்றாராம். பின்னர், அவருக்கேற்ப டியூனை மாற்றிக் கொடுத்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதேபோல், 'ஓராயிரம் பாடலிலே' பாடலைக் கேட்டு உருகிய ரஃபி, டி.எம்.எஸ்ஸின் தொண்டைப் பகுதியை வருடி, "ஆஹா... இங்கிருந்துதானா அந்தக் குரல் வருது" என்று வியந்திருக்கிறார். </p>
<p>42. வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்டு மயங்கிய சிவாஜி, இந்தக் காட்சியில் தன் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே பல நாள் தள்ளிப் போட்டு, வெவ்வேறு விதமாக நடித்து ரிகர்சல் பார்த்தார்.</p>
<p> 43. காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாயிபாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாயிபாபா ஒருமுறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார் டி.எம்.எஸ். </p>
<p>44. கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். இதனால் ஒருமுறை அவர், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காகக் கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் அந்த வரியை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடித் தந்தார். </p>
<p>45. பாடல் வரிகளில் உள்ள தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பாடுவதில் தேர்ந்தவர் டி.எம்.எஸ். இதை டாக்டர் மு.வரதராசனாரே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். </p>
<p>46. பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டால்தான், அதை உயிர்ப்போடு பாடமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே, டி.எம்.எஸ். நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடினார். </p>
<p>47. தான் பாடுகின்ற பாடல், அந்தக் கதைச் சூழ்நிலைக்கேற்பப் பக்காவாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுபவர் டி.எம்.எஸ். 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜி ஓடிக்கொண்டே பாடுகிற காட்சி என்பதால், தானே ஒலிப்பதிவுக் கூடத்தை மூச்சுவாங்க இரண்டு சுற்று ஓடிவந்து டி.எம்.எஸ். மூச்சு வாங்கிப் பாடிய பாடல்தான் 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...' </p>
<p>48. கவிஞர் வாலி முதன்முதல் எழுதியது, 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' என்ற பக்திப் பாடல். ஒரு தபால் கார்டில் இந்தப் பாடலை எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார் வாலி. அதற்கு இசையமைத்து ஹிட் ஆக்கினார் டி.எம்.எஸ். வாலிக்குத் திரையுலக வாசலைத் திறந்து வைத்த பாடல் இது என்றால் மிகையாகாது. </p>
<p>49. நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும்பொருட்டு கோயமுத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார் டி.எம்.எஸ். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான். </p>
<p>50. டி.எம்.எஸ். - சுமித்ரா திருமணப் பத்திரிகையில் ஒரு வேடிக்கையான அடிக் குறிப்பு போடப்பட்டது. 'தங்கள் பங்கான ரேஷன் அரிசியை திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு. திருமணத்தில் கலந்துகொள்கிறவர்கள் நிஜமாகவே அரிசி அனுப்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரிசித் தட்டுப்பாடு கடுமையாக நிலவிய காலகட்டம் அது. எனவே, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து உங்களுக்கு அரிசி கிடைத்தது?' என்று அதிகாரிகள் கேட்டால், அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் போடப்பட்ட ஒரு கண்துடைப்பு வாசகம்தான் அது. </p>
<p>51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.</p>
<p> 52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ்.</p>
<p> 53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர். </p>
<p>54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!</p>
<p> 55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை. </p>
<p>56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. </p>
<p>57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.</p>
<p> 58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ். </p>
<p>59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். </p>
<p>60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. </p>
<p>61.தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டு இன்று வரை எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ். </p>
<p>62. 2006-ல், டி.எம்.எஸ். ரசிகர் மன்றத்தார் டி.எம்.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஒரு விழா எடுத்தார்கள். ஒரு சிறிய ஹாலில், 200, 300 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்த விழாவுக்கு வந்திருந்த மு.க.அழகிரி, ரொம்பவும் வருத்தப்பட்டு, “என்னய்யா... ஒரு இசை மேதைக்கு இப்படியா சின்னதா விழா எடுக்கிறது! ஐயா! உங்க அடுத்த பிறந்த நாளைக்கு நான் எடுக்கறேன் பாருங்க ஒரு விழா!” என்று சொல்லி, சொன்னபடியே 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் ஒரு பிரமாண்ட விழா எடுத்து, மதுரையையே அதிர வைத்தார். </p>
<p>63. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!</p>
<p> 64. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார். </p>
<p>65. தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ். </p>
<p>66. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி. </p>
<p>67. "டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். </p>
<p>68. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை. </p>
<p>69. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார். </p>
<p>70. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். என்பது ஓர் ஆச்சரியம்! சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடியபின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார் டி.எம்.எஸ். </p>
<p>71. இவரை "சௌந்தர்" என்று அழைப்பார் எம்.ஜி.ஆர். "வாங்க டி.எம்.எஸ்!" என்பார் சிவாஜி. (டி.எம்.எஸ் இல்லாத நேரங்களில் மற்றவர்களிடம் சிவாஜி, "என்ன, பாகவதர் வந்து பாடிட்டுப் போயிட்டாரா?" என்று டி.எம்.எஸ். பற்றி விசாரிப்பதுண்டு. கேலியாக அல்ல; டி.எம்.எஸ்ஸை பாகவதருக்குச் சமமாக மதித்ததால்!) வெறுமே "சார்" என்று மரியாதையாக அழைப்பார் ரஜினி. கே.வி.மகாதேவனுக்கு டி.எம்.எஸ். "மாப்ளே..!". இயக்குநர் பி.ஆர்.பந்துலு டி.எம்.எஸ்ஸை "வாங்க ஹீரோ!" என்பார். </p>
<p>72. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன். </p>
<p>73. ஜேசுதாஸின் 'தெய்வம் தந்த வீடு...', பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...' ஆகிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ் . </p>
<p>74. மதுரையில் அரச மரத்துப் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கோயில் விழாவில், ரொம்ப பிஸியாக இருந்த காலத்திலும், தனக்கு எத்தனை நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, மதுரை சென்று அந்த விழாவில் கலந்துகொண்டு, கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். டி.எம்.எஸ். </p>
<p>75. ஆரம்ப காலத்தில் டி.எம்.எஸ்ஸின் வீட்டில் குடியிருந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, பல கச்சேரிகளில் தனக்கு வயலின் வாசிக்க வைத்திருக்கிறார் டி.எம்.எஸ். </p>
<p>76. டி.எம்.எஸ் பாடிய பாடல்களிலேயே, அவரின் துணைவியாருக்கு மிகவும் பிடித்த பாடல்... ‘உள்ளம் உருகுதய்யா முருகா...’</p>
<p> 77. டி.எம்.எஸ்ஸின் ஒரு மகன், பதினான்கு வயதில் உடல் நிலை கெட்டு, மரணம் அடைந்ததுதான் டி.எம்.எஸ்ஸின் மனத்தை ரணமாக்கிய நிகழ்ச்சி. மரணத் தறுவாயில் அந்தப் பிள்ளை, தன் தந்தையை முருகன் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபடியே உயிர் துறந்தான். </p>
<p>78. டி.எம்.எஸ் கச்சேரிகளில் அவருக்கு கீ-போர்டு வாசித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா; கிட்டார் வாசித்திருக்கிறார் கங்கை அமரன். </p>
<p>79. ‘நீராரும் கடலுடுத்த...’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜனகண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தி!</p>
<p> 80. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர். </p>
<p>81. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.</p>
<p> 82. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.</p>
<p> 83. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார்.</p>
<p> 84. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல். </p>
<p>85. பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.</p>
<p> 86. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். </p>
<p>87. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ். </p>
<p>88. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ். </p>
<p>89. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடிக்காத வார்த்தை 'வயசாயிடுச்சு!'. அயர்ச்சி, தளர்ச்சி, சோம்பல் எதுவும் இல்லாமல், இந்த 88 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார் டி.எம்.எஸ். அதற்குக் காரணம், தான் தினமும் தவறாமல் மேற்கொண்டு வரும் யோகாவும், ஆல்ஃபா மெடிட்டேஷனும், உடற்பயிற்சிகளும்தான் என்கிறார். </p>
<p>90. 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.</p>
<p> 91. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ். </p>
<p>92. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின. </p>
<p>93. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார். அந்தப் படம் வெளியாகவில்லை. </p>
<p>94. இந்த ஆண்டு, மார்ச் மாதம் 24-ம் தேதி, டி.எம்.எஸ்ஸுக்கு 88-வது பிறந்த நாள். அன்றைய தினம், அவர் மலேசியாவில் தயாராகி வரும் ஒரு தமிழ்ப்படத்தில், மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸின் இசையில், கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்திருக்கிறார். </p>
<p>95. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார். </p>
<p>96. கோவையில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, ஒரு இசை ஆல்பத்தில் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். </p>
<p>97. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை. </p>
<p>98. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார். </p>
<p>99. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி. </p>
<p>100. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான். </p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-42607129688433076712013-05-02T23:40:00.000-07:002013-05-02T23:40:04.460-07:00கவர்ச்சி கண்ணி கருப்பு உள்ளாடையில் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL9z41421ekSa7U8pBRxDBQ4NSB0M3sUkHz-ffYVpoqxmZe0uSAJhDgYjE49agGDioF5EcnSJJwjMFQOdDCz5GKcGvxiJ83UiGBWxST5cg0ml8o_WOqZtsHKrl4ANDCCOw-L_COM1D7Zx4/s1600/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL9z41421ekSa7U8pBRxDBQ4NSB0M3sUkHz-ffYVpoqxmZe0uSAJhDgYjE49agGDioF5EcnSJJwjMFQOdDCz5GKcGvxiJ83UiGBWxST5cg0ml8o_WOqZtsHKrl4ANDCCOw-L_COM1D7Zx4/s640/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-2.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnAbyS9_PRbtLFkPThlEfe7F9OO3ypZR-hbUxmuG8r5dTw2KPKP2KAQRglaQtf7mznlI6KsbUdut-6wlUQXkuI7gOGvaCHsAekR3dLxURwWXHnj_ZqnmNZzAV37mmA9NG2Nbptu0ugB7j7/s1600/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnAbyS9_PRbtLFkPThlEfe7F9OO3ypZR-hbUxmuG8r5dTw2KPKP2KAQRglaQtf7mznlI6KsbUdut-6wlUQXkuI7gOGvaCHsAekR3dLxURwWXHnj_ZqnmNZzAV37mmA9NG2Nbptu0ugB7j7/s640/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-3.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPSDVfzGrxssqkQ-Ikc2ejfYphAiFJhL-GecOWvOVRkR9dCh8h1kDMRxQkzpWMtS1-hJbyH20Bt_j2x6-pG_ZRBlx-il5258mJjlemmkgWo4hJjTJQM_82evOembarCkkijtKcDd3DSF7v/s1600/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPSDVfzGrxssqkQ-Ikc2ejfYphAiFJhL-GecOWvOVRkR9dCh8h1kDMRxQkzpWMtS1-hJbyH20Bt_j2x6-pG_ZRBlx-il5258mJjlemmkgWo4hJjTJQM_82evOembarCkkijtKcDd3DSF7v/s640/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-4.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiXxM5SdCYhREZ-beKMaRNU6w7JgpZ6fxMMYFxxGQ-VTyB4wG8T4k-vpY9567HnSIVnhhe5OajelV9c6gRfKXUCNyiOxY3vRFPp4qPgtd_vayqroBotKyCCb3jIn2yEhPwbaZibppTYAN4/s1600/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiXxM5SdCYhREZ-beKMaRNU6w7JgpZ6fxMMYFxxGQ-VTyB4wG8T4k-vpY9567HnSIVnhhe5OajelV9c6gRfKXUCNyiOxY3vRFPp4qPgtd_vayqroBotKyCCb3jIn2yEhPwbaZibppTYAN4/s640/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-5.jpg" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ-OVUUQzzIjRoCiIXwOF1BvgC4KRG7-diVE4_ddoDoPVAkvY4NxVgY2cwT3s5z4y2HavUIvhxbaSEfPsxTjYiVhzD70d5Xeo7ZbpjDdTtISA9BYADnV83uAQUN1CauB4rsm6syM3dRXim/s1600/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ-OVUUQzzIjRoCiIXwOF1BvgC4KRG7-diVE4_ddoDoPVAkvY4NxVgY2cwT3s5z4y2HavUIvhxbaSEfPsxTjYiVhzD70d5Xeo7ZbpjDdTtISA9BYADnV83uAQUN1CauB4rsm6syM3dRXim/s640/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-6.jpg" width="426" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6HfSBE_hm3tsugWoMQ9y1d-dbyUhrxL5MV4n_FYD2TKYG_7IVbKIyLvPatLI562VUINlw30qPHvj3D7ZHe7bYgqK0TU55R9YZ3LxKXpzr3zt3ri8PEt-8TLXecZSgQvy5c346fNNzTlur/s1600/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6HfSBE_hm3tsugWoMQ9y1d-dbyUhrxL5MV4n_FYD2TKYG_7IVbKIyLvPatLI562VUINlw30qPHvj3D7ZHe7bYgqK0TU55R9YZ3LxKXpzr3zt3ri8PEt-8TLXecZSgQvy5c346fNNzTlur/s320/Adrianna+Luna+Hot+Latina+Bares+All+in+Sin+City-1.jpg" width="320" /></a></div>
கவர்ச்சி கண்ணி கருப்பு உள்ளாடையில் </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-21410747340475187672013-04-10T23:04:00.002-07:002013-04-12T22:22:37.781-07:00Playboy CyberGirl of the Month கருப்பு உடையணிந்த கவர்ச்சி அக்கா நிர்வாண காட்சி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கருப்பு உடையணிந்த கவர்ச்சி அக்கா நிர்வாண காட்சி<br />
<br />
தனது உடைகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் படங்கள்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-w-Ox4hGMORw/UWZSM3fu4HI/AAAAAAAARjE/Aj0t-tI7YDc/s1600/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-w-Ox4hGMORw/UWZSM3fu4HI/AAAAAAAARjE/Aj0t-tI7YDc/s640/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-2.jpg" width="426" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-YghxVMG6F8s/UWZSNNOSNCI/AAAAAAAARjI/e_gVDEUP9m0/s1600/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-YghxVMG6F8s/UWZSNNOSNCI/AAAAAAAARjI/e_gVDEUP9m0/s640/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-1.jpg" width="426" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Id5GFItozRI/UWZSOQ3-vYI/AAAAAAAARjc/Mu9STUpetVM/s1600/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-Id5GFItozRI/UWZSOQ3-vYI/AAAAAAAARjc/Mu9STUpetVM/s640/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-3.jpg" width="426" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-MMArGEWQo_4/UWZSOVZyTxI/AAAAAAAARjg/GkmlvqEmAe8/s1600/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://4.bp.blogspot.com/-MMArGEWQo_4/UWZSOVZyTxI/AAAAAAAARjg/GkmlvqEmAe8/s640/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-4.jpg" width="426" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-k8Euzc5Qiw4/UWZSO3xpUuI/AAAAAAAARjo/btepzzgWS9A/s1600/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-k8Euzc5Qiw4/UWZSO3xpUuI/AAAAAAAARjo/btepzzgWS9A/s640/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-5.jpg" width="425" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-kyb86raZQJs/UWZSNYvWZzI/AAAAAAAARjQ/oH2hMLZYRIw/s1600/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://3.bp.blogspot.com/-kyb86raZQJs/UWZSNYvWZzI/AAAAAAAARjQ/oH2hMLZYRIw/s640/Jessie+Cabann%C3%A9+April+2013+Playboy+CyberGirl+of+the+Month-13.jpg" width="426" /></a></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-88301753788291633132013-04-04T00:23:00.002-07:002013-04-04T00:23:45.085-07:00அழகு அக்காக்களின் குளியல் காட்சிகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அழகு அக்காக்களின் குளியல் காட்சிகள்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkqU_OEfLEP8dlDwz5coHAE9og-bJR1OSUKMbVfsau0u2iTCE-y6ZkO5GKDafslHswUhxpvSsXT63X4S9c2zHPtlzf27mCXyyLHcB2Y-xN7nI1ITySXWE-OTlgQTzjaWyaSShEfXavQ-zW/s1600/Randy+Moore+D-Cup+Bombshell+in+Red+High+Heels-5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkqU_OEfLEP8dlDwz5coHAE9og-bJR1OSUKMbVfsau0u2iTCE-y6ZkO5GKDafslHswUhxpvSsXT63X4S9c2zHPtlzf27mCXyyLHcB2Y-xN7nI1ITySXWE-OTlgQTzjaWyaSShEfXavQ-zW/s400/Randy+Moore+D-Cup+Bombshell+in+Red+High+Heels-5.jpg" width="266" /></a></div>
<br />
அழகு தேவதிகள்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-s90C4MFC1ZE/UV0qI7rU3PI/AAAAAAAARXU/UO3YHOJl8Ds/s1600/Brett+Rossi+Soaks+Big+Boobs+by+the+Kitchen+Sink-15.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-s90C4MFC1ZE/UV0qI7rU3PI/AAAAAAAARXU/UO3YHOJl8Ds/s320/Brett+Rossi+Soaks+Big+Boobs+by+the+Kitchen+Sink-15.jpg" width="320" /></a><a href="http://1.bp.blogspot.com/-FOeN3xECIzs/UV0qI4qy2sI/AAAAAAAARXY/L12CaBwNNCY/s1600/Brett+Rossi+Soaks+Big+Boobs+by+the+Kitchen+Sink-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-FOeN3xECIzs/UV0qI4qy2sI/AAAAAAAARXY/L12CaBwNNCY/s320/Brett+Rossi+Soaks+Big+Boobs+by+the+Kitchen+Sink-2.jpg" width="213" /></a></div>
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-85410152151495526852013-03-27T03:00:00.004-07:002013-03-27T03:00:54.380-07:00நடிகை சுமித்ராவின் மகள் படுக்கையறை காட்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா.
இவர் தமிழில் ‘டூ´ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில்
‘வில்லேஜ் கய்ஸ்´ என்ற படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். இதில்
சுமித்ராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக ஹீரோவுடன்
கிளுகிளுப்பு காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தளத்தில்
சுமித்ராவும் இருந்ததால் அவர் கண்முன் காட்சிகள் படமாக்க இயக்குனர் தயக்கம்
காட்டினார்.<br />
<br />
நட்சத்திராவிடம் இது பற்றி இயக்குனர் கேட்டபோது, இந்த காட்சியில்
நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. அம்மா ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
நீங்கள் சீனை எடுங்கள் என்று இயக்குனருக்கு தைரியமூட்டினார். பின்னர் அந்த
காட்சி படமாக்கப்பட்டது. அப்போது யூனிட்டார் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இது
பற்றி சுமித்ராவிடம் கேட்டபோது, ‘ஹீரோவுடன் நட்சத்திரா நடித்த நெருக்கமான
காட்சி படமாக்கப்பட்டது உண்மைதான். நான் ஹீரோயினாக நடித்த காலத்தில் எனது
தந்தை துணைக்கு வருவார். அப்போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க
வேண்டிய சூழல் ஏற்பட்டால் தர்மசங்கடமாகிவிடும். இதையறிந்து கொண்டதும்
இயக்குனரே எனது தந்தையிடம் சென்று நீங்கள் கொஞ்சம் மற்றொரு அறையில்
இருங்கள் என்று வெளியில் அனுப்பிவிடுவார்.<br />
அதன்பிறகு அக்காட்சியில் நடிப்பேன். ஆனால் இப்போது யாரும் அதுபற்றி
கவலைப்படுவதில்லை. அதற்கு காரணம் இன்றைய இளையதலைமுறையினர் எண்ணம்
வேறுவிதமாக இருக்கிறது என்றார்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-63821519424518634902013-03-23T04:08:00.005-07:002013-03-23T04:08:55.553-07:00இனிமேல் பஞ்ச் டயலாக் இனி கிடையாது - அஜீத் முடிவு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;"> பஞ்ச் டயலாக் இனி கிடையாது </span></span>
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;">அஜீத் முடிவு </span></span></div>
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;"> </span></span></div>
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;">எப்போது
என்ன முடிவெடுத்தாலும் அதை சுத்தியல் போல நச்சென்று
இறக்குவதுதான்அஜீத்தின் ஸ்டைல்! தனது ரசிகர் மன்றத்தை கலைக்கிறேன் என்று
அவர் சொன்னபோது, இனி அவ்ளோதாம்ப்பா அவரு என்று வெளிப்படையாக கமெண்ட் அடித்த
கோடம்பாக்கம், மங்காத்தாவின் ஹிட்டுக்கு பிறகு பொத்திக் கொண்டது
அத்தனையையும்.</span></span></div>
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;">ருசி
கண்ட பூனை விதவிதமா தேடும் என்பார்கள். அதைதான் இப்போது அஜீத் விஷயத்திலும்
பார்க்க முடிகிறது. ஆமாம்... இப்போது இன்னும் சில முடிவுகளை
எடுத்திருக்கிறாராம் அஜீத். அது ரசிகர் மன்ற கலைப்பை விட பெரும்
அதிர்ச்சியை தரும் அவரது ரசிகர்களுக்கு.</span></span></div>
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;">ஸ்கிரினுக்கு
குளோசாக வந்து எதிரே உட்கார்ந்திருக்கும் ஆடியன்சை பார்த்து ஏதாவது
புரட்சி பஞ்ச் விடுவது ஹீரோக்களின் சமீபகால அட்ராசிட்டியாக இருக்கிறது.
நேற்று முளைத்த காளான்கள் கூட இப்படியெல்லாம் 'அட்ராசிட்டி' செய்து
வருவதால், மூத்த கலைஞரான அஜீத் வேணாம்ப்பா இந்த அலட்டல் என்று
நினைத்திருக்கலாம். இனிமேல் குளோஸ் அப் பஞ்ச் கள் இருக்கக் கூடாது என்று
தன் பட இயக்குனர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறாராம்.</span></span></div>
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;">அதுமட்டுமல்ல,
கூட்டமாக வந்து தன்னை போற்றி புகழ்வது போல ஒரு பாடலை வைக்க சொல்வார்கள்
பெரிய ஹீரோக்கள். அநேகமாக அது ஹீரோ அறிமுகமாகும் காட்சியாக இருக்கும்.
இனிமேல் தன்னை போற்றி புகழ்கிற பாடல் எதுவும் இருக்கவே கூடாது என்றும்
கூறிவிட்டாராம்.</span></span></div>
<div class="UNIbody">
<span style="font-family: Latha;"><span style="line-height: 20px;">என்னவோ திட்டம் இருக்கு! அது மட்டும் நல்லாவே புரியுது...</span></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-62306589108673693982013-03-17T23:30:00.001-07:002013-03-17T23:30:18.834-07:00பரதேசி சினிமா சிறப்பு விமர்சனம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<b>பரதேசி<span style="font-size: small;"> </span></b><b><span style="font-size: small;"><b><span style="font-size: small;">சினிமா </span></b>சிறப்பு விமர்சனம் </span></b><br />
<div dir="ltr" style="font-weight: normal; text-align: left;" trbidi="on">
<div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheDdcL0G3pDHHzH49VXBVVGpC-QmJ3_vIkTymQuZ18gxxi6KeWjJXu0Q7-PVF_6_sxgWWu-UdWWopCfTUXTbZtJA8FotfI8QgppSZ9mmhN0dveeRpI5qrweSWjs4cdZcnfygowt166Hs7B/s1600/url.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="310" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheDdcL0G3pDHHzH49VXBVVGpC-QmJ3_vIkTymQuZ18gxxi6KeWjJXu0Q7-PVF_6_sxgWWu-UdWWopCfTUXTbZtJA8FotfI8QgppSZ9mmhN0dveeRpI5qrweSWjs4cdZcnfygowt166Hs7B/s400/url.gif" width="400" /></a></div>
1939-ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்குகிறது கதை... ஊர் கோடாங்கியாக இருக்கும் அதர்வா, உருப்படியாக எந்த
வேலையும் செய்யாமல், தெருதெருவாக சென்று கொட்டடித்து சேதி சொல்லி, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி
வருகிறார். அப்பா, அம்மாவை இழந்த அதர்வாவுக்கு பாட்டி மட்டுமே துணையாக இருக்கிறார். இந்நிலையில், அந்த
ஊரிலேயே வசிக்கும் வேதிகா மீது அதர்வா காதல் வயப்பட்டு, இந்த காதல் ஊடலாகவும் மாறுகிறது.
<br />
<br />
இந்நிலையில், ஊரில் பஞ்சம் ஏற்பட, பிழைப்பு தேடி பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வா, அங்கு கங்காணி
ஒருவரை சந்திக்கிறார். அதர்வா மூலம் ஊர் மக்களை சந்திக்கும் கங்காணி, தன்னுடைய ஊரில் தேயிலைத்
தோட்டங்கள் அதிகமாக இருக்கிறது. அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. நல்ல சம்பளம், ஆண்டுக்கு ஒருமுறை
விடுமுறை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைக்கிறார்.
<br />
<br />
வறட்சியின் பிடியில் கிடந்து சாவதைவிட அங்கு சென்று ஒரு வாய் சோறு உண்டு காலத்தைத் தள்ளலாம் என
முடிவெடுக்கும் கிராம மக்களிடம், கங்காணி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, முன்பணத்தையும்
கொடுத்து தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். 48 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு ஒருவழியாக
தேயிலைத் தோட்டத்துக்கு வந்து சேர்கிறார்கள்.<br />
<br />
இந்நிலையில், ஊரில் அதர்வாவுடன் நெருங்கிப் பழகிய வேதிகா கற்பம் அடைகிறாள். இதுதெரிந்து, அவளது வீட்டில்
பிரச்சினைவர அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இதனால், அதர்வாவின் பாட்டி வேதிகாவுக்கு
அடைக்கலம் தந்து, தனது வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.
<br />
<br />
தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டு, 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழும் தன்சிகாவை
சந்திக்கிறார் அதர்வா. ஆதரவற்று இருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அதர்வா. <br />
<br />
இந்நிலையில், வேதிகா
கற்பமான விஷயம் பாட்டி அனுப்பும் கடிதம் மூலம் அதர்வாவிற்கு தெரிய வருகிறது.
எனவே, வேதிகாவைப் பார்க்கத் துடிக்கும் அதர்வா, விடுமுறையில் ஊருக்கு சென்றுவர நினைக்கிறான். ஆனால்,
விடுமுறை கொடுக்கமுடியாது. மேலும் சில ஆண்டுகள் நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டும் என சம்பளத்தை பிடித்துக்
கொண்டு ஊர் மக்களை ஏமாற்றுகிறார் கங்காணி. <br />
<br />
இதனால் ஏமாற்றமடைந்த அதர்வா, தேயிலைத் தோட்டத்திலிருந்து
தப்பித்து செல்ல முடிவெடுக்கிறார். ஒருமுறை தப்பித்துச் செல்லும்போது, கங்காணியின் ஆட்கள் அதர்வாவை பிடித்து
விடுகின்றனர். இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாதபடி அதர்வாவின் கால் நரம்பை துண்டித்துவிடுகிறார்கள்.
<br />
<br />
கடுமையான வேலைப்பளு, சரியான மருத்துவ வசதி இல்லாமை மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் தேயிலை
தோட்டத்தில் பணிபுரியும் நிறைய பேருக்கு விஷ காய்ச்சல் வந்து இறந்து போகிறார்கள். இந்த விஷக்காய்ச்சலுக்கு
தன்ஷிகாவும் பலியாகிறாள்.
<br />
<br />
இதிலிருந்து தப்பித்து அதர்வா, வேதிகாவை சந்தித்தாரா? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விடுவித்தார்களா?
என்பதே மீதிக்கதை.<br />
<br />
ஊர் கோடங்கியாக வரும் கதாநாயகன் அதர்வா, முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு
கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கண் அசைவில் இருந்து நடை, உடை, பாவனை என
அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார். <br />
<br />
தனக்கு சாப்பாடு போடாத கோபத்தில் தனியே அமர்ந்து இவர் கொட்டடிக்கும்
காட்சியில் நம்மை பரிதாபப்பட வைக்கிறார். படம் முழுக்க கோணிப் பையையே உடையாகவும், செருப்பே
போடாமலும் நடித்துள்ள அதர்வாவுக்கு மிகப்பெரிய சல்யூட். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும்
கரைய வைக்கும்.
<br />
<br />
அதர்வாவின் காதலியாக வரும் வேதிகாவுக்கு உண்மையிலேயே பாராட்டத்தக்க வேடம். கவர்ச்சி, குத்தாட்டம் என
ஆடிக்கொண்டிருந்த வேதிகா இப்படத்தின் முதல்பாதியில் நடிப்பு யுத்தமே நடத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
தன்னுடைய முகத்தை மட்டுமல்லாமல், கை, நகம் என அனைத்தையும் கருப்பாக்கி, உடல் அமைப்பையே மாற்றி
வாழ்ந்துள்ளார். கிளைமாக்சில் இவருடைய நடிப்பு இருக்கையோடு நம்மை உறைய வைத்திருக்கிறது.
<br />
<br />
வேதிகாவின் தோழியாக வரும் புதுமுக நாயகி ரித்விகா நெஞ்சை வருடுகிறாள். ரித்விகாவின் கணவனாக வரும் அந்த
நாயகனின் நடிப்பு மெய்சிலிர்க்கிறது. இந்த கணவன்-மனைவி ஜோடி பல இடங்களில் நெஞ்சை நெகிழ
வைத்திருக்கிறது. ‘அரவான்’ புகழ் தன்சிகா நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கிறார். இரண்டாம் பாதியில்
இவருடைய நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
<br />
<br />
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தபட்டு, பல்வேறு கொடுமைகள்
அனுபவித்ததற்கு ஆங்கிலேயர்கள் மட்டும் காரணமல்ல, நம் இன மக்களும்தான் என்பதை அப்பட்டமாக தோலுரித்துக்
காட்டியிருக்கிறார் பாலா. <br />
<br />
முதல் பாதி முழுக்க காதல், காமெடி என ஆரம்பித்து, கிளைமாக்சில் நெஞ்சை அதிர
வைக்கும் காட்சிகள் என தனக்கே உரித்தான பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார் பாலா. <br />
<br />
முதல் பாதியில் பொழுதுபோக்கு அம்சங்களை கொடுத்த பாலா, இரண்டாம் பாதியில் தேயிலை தோட்ட
தொழிலாளர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார். <br />
<br />
ஒரு இனத்தைப்
பற்றிய கதை என்பதால் படம் முழுக்க காமிராவில் குறைந்தபட்சம் 50 பேர் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
அத்தனை பேரிடமும் இவ்வளவு அழுத்தமான நடிப்பை பாலா எப்படி வாங்கினார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.
<br />
<br />
ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அவற்றை படத்தில்
காட்சியப்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில்
மிரட்டியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். படத்தின் டைட்டில் போடுவது முதல் கடைசி வரை படத்தின்
கதையோடு நம்மை ஒன்ற வைப்பதில் இவரின் பங்கும் இன்றியமையாதது.<br />
<br />
நாஞ்சில் நாடன் மொழிபெயர்ப்பு செய்த ‘எரியும் தணல்’ நாவலின் தழுவலே இந்த பரதேசி. நாஞ்சில் நாடனே இப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய வசனங்கள் சில இடங்களில் சற்று முகம் சுளிக்க
வைக்கும் நகைச்சுவையாக இருந்தாலும் பல இடங்களில் கதை கருவின் உண்மை தன்மையை விளக்கி
கூறியிருக்கிறது.<br />
<br />
<br />
சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடக்கும் நடக்கும் கதை என்பதால் உடை, அலங்காரம், செட், வசன உச்சரிப்பு என
அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒருங்கே காட்சிப்படுத்தி நம் கண்களில் நீங்கா
இடம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தியே லைட்டிங் அமைத்து
பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
<br />
<br />
மொத்தத்தில் ‘பரதேசி’ விருதுகள் பல குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-72441099760550514722013-02-25T22:43:00.002-08:002013-02-25T22:43:30.071-08:00பவர் ஸ்டாருடன் குத்தாட்டமா..? : அலறி ஓடிய லட்சுமிராய்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-qVhMx0OxjTA/USxZh74WszI/AAAAAAAAQPQ/NHXp5NAkOU0/s1600/1652-lakshmi-rai-says-i-dont-like-dance-with-power-star.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="199" src="http://1.bp.blogspot.com/-qVhMx0OxjTA/USxZh74WszI/AAAAAAAAQPQ/NHXp5NAkOU0/s320/1652-lakshmi-rai-says-i-dont-like-dance-with-power-star.jpg" width="320" /></a></div>
<span>நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார் முதல்முறையாக டைரக்ட் செய்து வரும் படம் தான் ‘ஒன்பதுல குரு’.</span><br />
வினய், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உட்பட பலர் நடிக்கும் இந்தப்படத்தில்
ஹீரோயினாக லட்சுமிராய் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பாடலுக்கு
‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒரு குத்தாட்டம் போடுகிறாராம். இந்த
குத்தாட்டத்தில் ஹீரோயின் லட்சுமிராயையும் அவருடன் சேர்ந்து ஆட வைக்க
முயற்சிகள் நடந்தது.<br />
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பாப்புலரான பவர்ஸ்டார் தனது
சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறாராம். அவரை இந்தப்படத்தில் ஒரே ஒரு
பாடலுக்கு குத்தாட்டம் போட கூப்பிட்ட போது முதலில் மறுத்து விட்டாராம்.
ஆனால் உங்களுடன் சேர்ந்து லட்சுமிராயும் ஆட்டம் போடுகிறார் என்று சொன்னதும்
பீஸ் போல பல்புக்கு பவர் வந்த கதையாக குஷிமூடில் உடனே ஓ.கே
சொல்லிவிட்டாராம் சீனிவாசன்.<br />
ஆனால் இந்த தகவலை கேள்விப்பட்ட லட்சுமிராய் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆடவே முடியாது என்று மறுத்து விட்டாராம். மேலும்<br />பவர்
ஸ்டாரா..? அப்படின்னா யாரு..? என்றும், யாருன்னே தெரியாதவங்க கூடயெல்லாம்
என்னால டான்ஸ் ஆட முடியாது என்றும் கண்டிஷனாக கூறினாராம்.<br />
இதனால் வேறு வழியின்றி பவர் ஸ்டார் சீனிவாசனை மற்ற துணை நடிகைகளுடன்
சேர்ந்து ஆட வைத்து பாடல் காட்சியை படமாக்கியிருக்கி
முடித்திருக்கிறார்கள்.<br />
இதற்கிடையே “ தன்னுடன் ஆட மறுத்த லட்சுமிராயை எவ்வளவு சம்பளம்
கேட்டாலும் கொடுத்து ஒரு படத்தில் ஹீரோயினியாக்கியே தீருவேன் என்று
பிடிவாதமாக இருக்கிறாராம் பவர்.<br />
அதுசரி பவர் ஐஸ்வர்யாராய்க்கே நூல் விட்டவராச்சே..? செஞ்சாலும் செய்வார்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-18610624226388142882013-02-20T17:52:00.001-08:002013-02-20T17:52:07.657-08:00தென்கொரியா செல்லும் நீர்பறவை<p>கடலோர மீவர்களின் வாழ்க்கையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைகளையும் எடுத்துச் சொல்லும் படமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல படம் என்ற பெயரைச் சம்பாதித்த படம் தான் நீர்ப்பறவை.<br>
இந்தப்படத்தில் ஹீரோவாக விஷ்ணுவும்,ஹீரோயினாக சுனேனாவும் நடித்திருந்தனர். தேசிய விருதுகளை வாங்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தை டைரக்டர் செய்த சீனுராமசாமி தான் இந்தப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.<br>
மீனவ மக்களின் அவலநிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும் இந்தப்படம் இப்போது தென்கொரியாவில் நடைபெறும் Jeonju சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.<br>
வருகிற ஏப்ரம் மாதம் 25-ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஹிந்தியல்லாத திரைப்பட பிரிவில் இந்தப்படம் திரையிடப்பட இருக்கிறது.<br>
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டைரக்டர் சீனு ராமசாமி “ இது போன்ற நல்ல படங்களை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகவும்,பெருமையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட தேர்வுகள் தொடர்ந்து தமிழில் தரமான திரைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும் என்று கூறியிருக்கிறார்.</p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-84726444341465937162013-02-19T20:40:00.000-08:002013-02-19T20:40:36.652-08:00முனி பார்ட் 3 இல் லாரன்ஸுடன் இணையும் அனிருத் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-PtV29ldYBrE/USRThP3bP4I/AAAAAAAAPnI/gCwCuLYfVSU/s1600/1616-lawrence-signs-anirudh-for-muni-3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="199" src="http://3.bp.blogspot.com/-PtV29ldYBrE/USRThP3bP4I/AAAAAAAAPnI/gCwCuLYfVSU/s320/1616-lawrence-signs-anirudh-for-muni-3.jpg" width="320" /></a></div>
<strong>லா</strong>ரன்ஸ் டைரக்ட் செய்து வரும் முனி பார்ட்-3 இல் இளம்
மியூசிக் டைரக்டர் அனிருத் மியூசிக் டைரக்டராக கமிட்டாகியிருக்கிறார் என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.<br />
<br />
<br />
<br />
<span>பிரபல நடன இயக்குனரான லாரன்ஸ்
டைரக்ட் செய்த முனி மற்றும் அதன் இரண்டாவது பாகமான காஞ்சனா ஆகிய இரண்டு
படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும்
காஞ்சனா மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரையும்,புகழையும்,
சம்பாத்தியத்தையும் பெற்றுத்தந்தது.</span><br />
அதனால் இப்போது அந்தப்படத்தின் மூன்றாம் பாகமாக ‘முனி பார்ட்3’ என்ற
படத்தை டைரக்ட் செய்து வருகிறார் லாரன்ஸ். முதல் பாகத்தில் வேதிகாவையும்,
இரண்டாம் பாகத்தில் லட்சுமி ராயையும் ஹீரோயினாக நடிக்க வைத்த லாரன்ஸ்
இந்தப்படத்தில் டாப்சியை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.<br />
வேகமாக நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து
தொழில்நுட்ப வேலைகள் நடைபெற இருப்பதால் இப்போது படத்தின் மியூசிக்
டைரக்டராக அனிருத்தை கமிட் செய்திருக்கிறார்.<br />
தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அனிருத் தான் இந்தப்படத்துக்கு
இசையமைக்கிறாராம். 21- வயது இளம் இசையமைப்பாளரான அனிருத் தனுஷ் நடித்த 3
படத்தில் “ ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடையே
பிரபலமானார்.<br />
இதுகுறித்து அனிருத் கூறும்போது : முனி 3 ஆம் பாகத்தில் மியூசிக்
டைரக்டராக கமிட்டானதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. லாரன்ஸ் அவர்கள்
சொன்ன ஸ்டோரியை கேட்ட உடனே இந்தப்படத்துக்கு நாம் தான் இசையமைக்க வேண்டும்
என்று முடிவெடுத்து விட்டேன்.ஒரு சக்சஸ் டீமில் நானும் இணைந்தது எனக்கு
சந்தோஷமாக உள்ளது என்று கூறியிருக்கிறார் அனிருத்</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-38253190619118397842013-02-18T13:57:00.001-08:002013-02-18T13:57:48.343-08:00Brandy Aniston hot photo<p>Brandy Aniston has been named the 2013 AVN Unsung Starlet of the Year and she shows off her award winning stripping skills for Aziani. What you are about to see will thrill you.</p>
<p>Brandy’s body is hugged by a tight dress and watching her peel it off is captivating. She has a way of looking through the lens and demanding your attention. She commands every moment as her black bra and panties are removed.</p>
<p>With her big breasts and fit figure in full view, Brandy keeps the heat on high. She wiggles her hips and then twists to cast an inviting look over her slim shoulder. She isn’t done with your desire yet. She has only just begun.</p>
<div class='separator' style='clear: both; text-align: center;'> <a href='http://lh3.ggpht.com/-gJkXp946Z64/USKj1vWeqmI/AAAAAAAAPZY/rvPs2owaMGA/s1600/az-brandyaniston-1-04.jpg' imageanchor='1' style='margin-left: 1em; margin-right: 1em;'> <img border='0' src='http://lh3.ggpht.com/-gJkXp946Z64/USKj1vWeqmI/AAAAAAAAPZY/rvPs2owaMGA/s640/az-brandyaniston-1-04.jpg' /> </a> </div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-8931585151402686752013-02-15T22:25:00.000-08:002013-02-15T22:25:04.703-08:00அரைமணி நேரத்தில் ரெடி : இளையராஜா இசையில் கமல் பாடிய ஹிந்திப்பாடல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரைமணி நேரத்தில் ரெடி : இளையராஜா இசையில் கமல் பாடிய ஹிந்திப்பாடல்!<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix4goZa-Y4lC4nLvCZOjVzjVRkKmaHf2ezmbfKbBVWrzlqgpFPI7WRuzd8to1RJk86U6xxq6dyJsIuEcuTx7mkSFlJ_9cK3XJaUnV0x_vb2JL_BI_6G7NbRw7KH_WBiSSmvwPcfq6ZGkJ_/s1600/13.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix4goZa-Y4lC4nLvCZOjVzjVRkKmaHf2ezmbfKbBVWrzlqgpFPI7WRuzd8to1RJk86U6xxq6dyJsIuEcuTx7mkSFlJ_9cK3XJaUnV0x_vb2JL_BI_6G7NbRw7KH_WBiSSmvwPcfq6ZGkJ_/s320/13.jpg" width="320" /></a>‘விஸ்வரூபம்’ பிரச்சனைகளையெல்லாம் மறந்து விட்ட கமல் ஒருபக்கம் அதன்
இரண்டாம் பாகத்தை ரெடி செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அதுபோக அவ்வப்போது மற்ற கலைப்பணிகளையும் செய்து வரும் அவர், இசைஞானி
இளையராஜா இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அதுவும் அரைமணி
நேரத்தில்..<br />
<div style="clear: right; float: left; margin-bottom: 2em; margin-right: 3em;">
</div>
<div>
பிரபல பாலிவுட் டைரக்டரான பாவ்னா தல்வார் பங்ஹஜ் கபூரை வைத்து
‘ஹேப்பி’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப்படத்துக்கு இசைஞானி
இளையராஜா தான் இசையமைத்து வருகிறார். </div>
<br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-37709143815199094802013-02-07T21:43:00.003-08:002013-02-07T21:43:31.603-08:00ஷெர்லின் சோப்ராவின் ‘காமசூத்ரா 3டி’ படத்தில் நாசர்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7lemQ_gRWXAAMkNxSO_ZbT2PJegXDLqj8AlwglzLJ4OlqLHmRAe9-NFzryKXXK5KqUInlcQLQMEczj_KIj2lT9vrN2bMmkBxGc5-17FkXz1VbpvrZELVrQjhUGbH-E2TkjWxDXm9nDNU/s1600/1528-actor-nazar-plays-daddy-role-in-kamasutra-3d.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7lemQ_gRWXAAMkNxSO_ZbT2PJegXDLqj8AlwglzLJ4OlqLHmRAe9-NFzryKXXK5KqUInlcQLQMEczj_KIj2lT9vrN2bMmkBxGc5-17FkXz1VbpvrZELVrQjhUGbH-E2TkjWxDXm9nDNU/s320/1528-actor-nazar-plays-daddy-role-in-kamasutra-3d.jpg" width="320" /></a></div>
<strong>அ</strong>வ்வப்போது கவர்ச்சி ஸ்டில்களை இணையதளங்களில் ரிலீஸ்
செய்து இளவட்ட பசங்களை சூடேற்றி வரும் ஷெர்லின் சோப்ரா ஹீரோயினாக நடித்து
வரும் ‘காமசூத்ரா 3டி’ என்ற படத்தில் பிரபல தமிழ்நடிகர் நாசரும் ஒரு
முக்கியமான கேரக்டரில் நடிக்கப்போகிறாராம்.<br />
இந்தப்படத்தின் முதற்கட்ட போட்டோசெஷன் ஸ்டில்களே சக்கைப்போடு போட்டு
வருகிறது. மேலும் இந்தப் படத்தில் தனது அதிபட்ச கவர்ச்சியை படத்தில்
அள்ளித் தெளித்து வருகிறாராம் ஷெர்லின் சோப்ரா.<br />
அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் வரும் ஷெர்லின் சோப்ராவின் டாப்லெஸ் காட்சிகள் கூட இணையதளங்களில் பரபரப்பை உண்டு பண்ணி வருகின்றன.<br />
ரூபேஷ் பால் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் தமிழ்சினிமாவின் பிரபல
குணச்சித்திர நடிகராக வலம்வரும் நடிகர் நாசர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக
புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.<br />
படத்தில் ராஜபுதன அரசராக நாசர் நடிக்கப்போவதாகவும், படத்தின் கதைப்படி இவர் ஷெர்லின் சோப்ராவின் அப்பாவாகவும் வருகிறாராம்.<br />
வாத்ஸாயனனின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8280063854217662858.post-87759362234048089702012-11-06T22:47:00.001-08:002012-11-06T22:47:33.757-08:00சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்ரிஷா!சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்ரிஷா! <br> <div class=""> <img src="http://pirapalam.com/wp-content/uploads/2012/11/Trisha-in-JFW-Magazine-New-Photoshoot-3-300x336.jpg" class="" alt="Trisha-in-JFW-Magazine-New-Photoshoot-3" title="Trisha-in-JFW-Magazine-New-Photoshoot-3"> </div> <p>தந்தையின் திடீர் மரணம் காரணமாக ஹைதராபாத் சென்ற த்ரிஷா அந்த சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. என்றாலும் கடமை அழைக்கிறது.<span id="more-13055"></span></p> <p>சமர், என்றென்றும் புன்னகை, பூலோகம் என தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் சமர் சூப்பர் சீனியர். விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு த்ரிஷாவுக்காக காத்திருக்கிறது. அவர் வந்தால் மலேசியா சென்று பாடல் காட்சிகளை முடிக்கலாம் என்றிருக்கிறார் இயக்குனர் திரு.</p> <p>அதேபோல் மற்ற இரு படங்களும்.</p> <p>சீனியாரிட்டி அதிகம் சமர் என்பதால் அதற்கே முக்கியத்துவம் தரயிருக்கிறார். அடுத்து பூலோகம் அதையடுத்து என்றென்றும் புன்னகை.</p> Unknownnoreply@blogger.com0