கோலிவுட் கவர்ச்சி நடிகை சோனா மறுபடியும் சர்ச்சை வளையத்திற்குள் வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பரபரப்பு புகார் அளித்த அவர் இந்த முறை தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக ஆர்த்தெழுந்துள்ளார். சிவா மீது கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை சோனா. முதலில் சரண் மீது குற்றம் சுமத்தி வானும், பூமிக்கும் குதித்தவர் பின்னர் சமாதானம் ஆகிவிட்டார். அதன் பிறகு அமைதியாக இருந்து வந்த அவர் தற்போது தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கொடுத்த புகாரில்
நானும், சிவாவும் சேர்ந்து 50-50 சதவீதத்தில் கனிமொழி என்ற படத்தை தயாரித்தோம். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழிகளின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமை இருக்கிறது. இந்நிலையில் அவர் என் அனுமதி இன்றி கனிமொழி படத்தின் டப்பிங் உரிமையை தெலுங்கு தயாரிப்பாளர் ஜக்குலா நாகேஸ்வர ராவுக்கு விற்றுவிட்டார்.
ஒப்பந்தத்தை மீறி அவர் தன்னிச்சையாக டப்பிங் உரிமையை விற்று என்னை ஏமாற்றியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
http://tamil-sexygirls.blogspot.com
http://tamil-sexygirls.blogspot.com
No comments:
Post a Comment