தனியாக வாழ பிடிக்கிறது மனிஷா கொய்ராலா தனியாக வாழ பிடிக்கிறது மனிஷா கொய்ராலா
மும்பை, அக். 5-
நடிகை மனிஷா கொய்ராலா கணவர் சாம்ராட்தகலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார். மும்பையில் தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 2010-ல் திருமணம் நடந்தது. சாம்ராட் நேபாளத்தில் தொழில் அதிபராக உள்ளார்.
மனிஷாகொய்ராலா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்திப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எடவப்பதி என்ற மலையாள படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். மனிஷா கொய்ராலா மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-
மீண்டும் நடிக்க வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மலையாளத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கிறேன். அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்கின்றனர். அதில் எனக்கு விருப்பம் இல்லை. திருமணம் செய்து கொண்டதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
திருமணம் நடக்கவேண்டும் என்று இருந்தது, நடந்தது. இப்போது தனியாக வசிப்பதில் சந்தோஷப்படுகிறேன். படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளேன். எதிர் காலத்தில் அது நடக்கும். ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. அதே வேளை, நான் மதவாதி அல்ல. தியானம் செய்வது பிடிக்கும். ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பதால் சாமியாராகப் போகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.