12:23 AM
0
மூணு வேளையும் மிளகாயை வச்சே பல் தேய்க்கிற ஊரு போலிருக்கு கர்நாடகா! எதற்கெடுத்தாலும் பிரச்சனை, எல்லா மேட்டரையுமே சண்டை என்கிற கோணத்தில் பார்க்கும் இவர்களிடம் பிரச்சனைகள் தேடி தேடி போய் சிக்கிக் கொள்வதுதான் ஆச்சர்யம்.

நம்ம ஊரு கேமிராமேன் பாலபரணி இப்போது ஒரு கன்னட படத்திற்கு கேமிராமேனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் 'பியார்கே அக்படைதே' அப்படின்னா காதல் வந்துருச்சு என்று அர்த்தமாம். காதல் வந்ததோ இல்லையோ, ஷுட்டிங் ஸ்பாட்டில் சண்டைதான் வந்ததாம். 

பிரபல கவர்ச்சி ஆட்டக்காரி ரக்சனா மவுரியாவின் கவர்ச்சி பாடல் ஒன்றை படமாக்க மைசூருக்கு போயிருந்தார்களாம். அரை ஸ்கர்ட், ஆடா தொடையழகு என்று மொத்த கூட்டத்தையும் கிறங்கடித்த ரக்சனா, கரெக்டாக ஸ்டெப் வைக்க போகும் நேரம் பார்த்து சுமார் 100 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்ததாம்.
ஷுட்டிங்கை நிறுத்து. கண்ணியமான எங்க மைசூர் மஹாராஜா வாழ்ந்த ஊரில் இப்படி அரைகுறை ஆட்டம் போடறதை நாங்க பொறுத்துக்க மாட்டோம். இடத்தை காலி பண்ணுங்க என்று கோஷம் போட, கேரவேனுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாராம் ரக்சனா மவுரியா.

அதற்கப்புறம் எப்படியோ பேசி, அரை ஸ்கர்ட்டுக்கு பதிலாக பேண்ட் சட்டை போட்டு படமாக்கினார்களாம். நல்லவேளை.... கேமிராமேன் தமிழன்னு தெரியல. தெரிஞ்சிருந்தா கலவரத்தை கண்ட்ரோல் பண்ண கண்ணீர் புகை தேவைப்பட்டிருக்கும்!

0 comments:

Post a Comment

POPULAR POSTS