5:02 AM
0

4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை 4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை

துபாய், செப் 28-
 ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் எகிப்து நாட்டை சேர்ந்த ரஷ் அல் கஸ்மா (வயது 28) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். அவர் 4 மாதங்களுக்கு முன்பு எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.    இதை மறைத்து விட்டு ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவியுடன் வேறு ஒரு ஆண் சுற்றுவதை முதல் கணவர் பார்த்து வ�® �ட்டார். அவர் நீ எப்படி என் மனைவியுடன் சுற்றலாம் என கேட்டு தகராறு செய்தார்.  இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது தான் தனது மனைவிக்கு எற்கனவே திருமணம் நடந்து இருப்பது 2-வது கணவருக்கு தெரிந்தது.    இதையடுத்து அவர் ஐக்கிய அரபு எமிரேட் கோர்ட்டில் மனைவி ரஷ் அல் கஸ்மா மீது புகார் கொடுத்தார். தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்à ��ார் என்று புகாரில் அவர் கூறியுள்ளார்.  ஆனால் ரஷ் அல் கஸ்மா நான் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தான் 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கோர்ட்டில் கூறியுள்ளார். ஆனால் முதல் கணவர் இதை மறுத்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment

POPULAR POSTS