11:39 PM
0


எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா எனக்கு ஓய்வு பிடிக்காது: திரிஷா

'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை', 'சமர்' படங்களில் நடிக்கிறார் திரிஷா. 'சமர்' படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இன்னொரு புறம் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார்.

ரசிகர் மன்றம் மூலம் ஓசையில்லாம் சமூக சேவை பணிகளையும் செய்து வருகிறார். இதுகுறித்து திரிஷா கூறியதாவது:-

நான் நடிகையானது மகிழ்ச்சி அளிக்கிறது. சூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். படப்பிடிப்பில் ஒருபோதும் சோர்வடைந்தது இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தமாக இருக்கிறேன். எனக்கு ஓய்வு என்பதே பிடிக்காது. எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியம் இருந்தால் அதுவே ஓடஓட விரட்டிக் கொண்டே இருக்கும். வேலைக்கு போகும் பலர் வாரத்துக்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் வேண்டும் என்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் வேலையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள். பணி செய்வதில் ஈடுபாடு இருந்தால் மனம் ஓய்வை நாடாது.

இவ்வாறு திரிஷா கூறினார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS