4:08 AM
0
 பஞ்ச் டயலாக்  இனி கிடையாது    அஜீத்  முடிவு 
 
எப்போது என்ன முடிவெடுத்தாலும் அதை சுத்தியல் போல நச்சென்று இறக்குவதுதான்அஜீத்தின் ஸ்டைல்! தனது ரசிகர் மன்றத்தை கலைக்கிறேன் என்று அவர் சொன்னபோது, இனி அவ்ளோதாம்ப்பா அவரு என்று வெளிப்படையாக கமெண்ட் அடித்த கோடம்பாக்கம், மங்காத்தாவின் ஹிட்டுக்கு பிறகு பொத்திக் கொண்டது அத்தனையையும்.
ருசி கண்ட பூனை விதவிதமா தேடும் என்பார்கள். அதைதான் இப்போது அஜீத் விஷயத்திலும் பார்க்க முடிகிறது. ஆமாம்... இப்போது இன்னும் சில முடிவுகளை எடுத்திருக்கிறாராம் அஜீத். அது ரசிகர் மன்ற கலைப்பை விட பெரும் அதிர்ச்சியை தரும் அவரது ரசிகர்களுக்கு.
ஸ்கிரினுக்கு குளோசாக வந்து எதிரே உட்கார்ந்திருக்கும் ஆடியன்சை பார்த்து ஏதாவது புரட்சி பஞ்ச் விடுவது ஹீரோக்களின் சமீபகால அட்ராசிட்டியாக இருக்கிறது. நேற்று முளைத்த காளான்கள் கூட இப்படியெல்லாம் 'அட்ராசிட்டி' செய்து வருவதால், மூத்த கலைஞரான அஜீத் வேணாம்ப்பா இந்த அலட்டல் என்று நினைத்திருக்கலாம். இனிமேல் குளோஸ் அப் பஞ்ச் கள் இருக்கக் கூடாது என்று தன் பட இயக்குனர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல, கூட்டமாக வந்து தன்னை போற்றி புகழ்வது போல ஒரு பாடலை வைக்க சொல்வார்கள் பெரிய ஹீரோக்கள். அநேகமாக அது ஹீரோ அறிமுகமாகும் காட்சியாக இருக்கும். இனிமேல் தன்னை போற்றி புகழ்கிற பாடல் எதுவும் இருக்கவே கூடாது என்றும் கூறிவிட்டாராம்.
என்னவோ திட்டம் இருக்கு! அது மட்டும் நல்லாவே புரியுது...

0 comments:

Post a Comment

POPULAR POSTS