10:53 PM
0
குமுறி குமுறி அழுத கதாநாயகன் யார்? ரகசியம் அம்பலம் அப்படிங்கிற. தலைப்பைப் படிச்சவுடனே வேகமாக வந்த உங்களுக்கு நன்றி....!

'கடல்' பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவையே கலங்கடித்துவிட்டாராம். இந்தப் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? நம்ம மணிரத்னம் சார்தான்.

கௌதம்- சிறுவயது படம்
குறிப்பு: இப்போ இருக்கிற படத்தைப் போடவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் சிறுவயது படம் இடம்பெற்றிருக்கிறது.
யார் இந்த நாயகன்?
நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் தான். மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹ� ��ரோவாகிறார் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கௌதமின் கச்சிதமான நடிப்பு:
ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். படத்தில் நாயகன் அனாதை நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும் என்பது போல காட்சி.

காட்சியை நாயகனிடம் � �ணிரத்னம் விவரிக்க, இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே காரித்திக்கின் மகன் அழுது உருகிவிட்டாராம். இவரின் நடிப்பைப் பார்த்த படக்குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டதாம்.

அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் புதுமுகமாக இருந்தாலும் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் ஆயிற்றே..! இது கூட செய்யாமல் இருந்தால் எப்படி? அதுவும் மணிரத்னத்தின் இயக்க த்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.
கடல் பட நடிகர்கள்:
தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் அரவிந்த் சாமி திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். முக்கிய வேடத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமுறி, குமுறி அழவேண்டிய அளவுக்கு இவருக்கு ஒன்னும் வசதி குறைச� �சல் இல்லீங்க. எல்லாம் நடிப்புக்காகத்தான். அப்படியே கீழே இருக்கிற செய்தியையும் படிச்சுட்டு முடிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.. எனக்கு வாயெல்லாம் 'நம நம'ன்னு இருக்கு. யாரும் என்கிட்ட வாய் கொடுக்கமாட்டேங்கிறாங்க.. நீங்களாவது கமெண்ட் பண்ணுங்க.. பதில் எல்லாமே அதிரடியாதான் இருக்கும்....இனி பதிவோட செய்தி...
http://cinema-news7.blogspot.com

0 comments:

Post a Comment

POPULAR POSTS