12:44 AM
1
அண்மையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகராமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் அனுஷ்காவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். சிங்கம் கதையின் தொடர்ச்சியே 'சிங்கம் 2 படத்தின் கதை. சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த சிங்கம் 2 திரைப்படமும் நல்ல வரவேற்ப்பு பெற்றிருப்பதால் சிங்கம் 3 உருவாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னணி டிவி சேனல் ஒன்று, மாணவிகளிடம் சூர்யா கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. MOP வைஷ்ணவா கல்லூரியில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சூர்யாவுடன் ஹரியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் சூர்யா பதிலளித்தார்.

இந்தியில் வெளியான 'தோஸ்தானா' என்ற படத்தை தமிழில் எடுத்தால், யாருடன் சேர்ந்து நடிப்பீர்கள் என்று சூர்யாவிடம் கேட்டபோது, மாதவன் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார். இதேபோல் மற்றொரு கேள்வியில் 'தல', 'தளபதி' இருவரில் யாரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டதற்கு, 'தல-தளபதி' என்று கூறி நழுவி விட்டார். சிங்கம் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், லிங்குசாமி இயக்கம் படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

POPULAR POSTS