9:16 PM
0






ஷூட்டிங்கிலிருந்து திடீர் ஓய்வு எடுத்தது ஏன் என்பதற்கு சமந்தா பதில் அளித்தார். பாணா காத்தாடி, நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஹீர ோயினாக ஒப்பந்தம் ஆனவர். திடீரென்று அப்படங்களிலிருந்து விலகினார். 

தோலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் விலகியதாக தெரிந்தது. மேலும் ஒரு சில படங்களின் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவருகிறார்.


மீண்டும் நடிக்க வருவது எப்போது என்று கேட்டபோது அவர் பதில் அளித்தார்.

புதிய படங்கள் எதையும் நான் ஒப்புக்கொள்ளவி� ��்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பதுதான் இப்போதைய எண்ணம். அவை முடிந்தபிறகுதான் புதியபடங்கள் பற்றி யோசிப்பேன். என்னுடைய கனவுகள் நனவாகி வருகின்றன. அவற்றை சந்திப்பதற்காக நான் பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இது கடினமான விஷயம்தான். ஆனால் எனது சொந்த காலில் நின்று எல்லாவற்றையும் ஜெயிப்பேன். இவ்வாறு சமந்தா கூறினார். தோல் நோயிலிருந்து � �ீண்டிருக்கும் சமந்தா, இம்மாதம் 20ம் தேதி முதல் நந்தினி ரெட்டி இயக்க நாக சைதன்யா நடிக்கும் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து மற்ற ஷூட்டிங்கிலும் கலந்துகொள்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவித்தனர்.
.






0 comments:

Post a Comment

POPULAR POSTS